கெய்ஷா -கடிதங்கள்

17

அன்புள்ள ஜெமோ,

 

 

கெய்ஷா சிறுகதை சிறப்பு. சோழர்கள் காலத்திலும் இது போன்ற விஷயங்கள் உண்டென்று படித்த ஞாபகம். (அரசனுக்கு அணுக்கி , அரசிக்கு அணுக்கன்). ஸ்பீல்பெர்க் தயாரித்த  “the memoirs of geisha” எனும் திரைப்படத்தை சில வருடங்களுக்கு முன் பார்த்ததால் , உங்களின் கெய்ஷா சிறுகதையை சிரமமின்றி படிக்கவும், புரிந்து கொள்ளவும் முடிந்தது.

 

காமத்தின் அடித்தளத்தில் கட்டப்படும் காதல் மாளிகைகளின்  வாசல்கள், கோபுரங்கள் , சன்னல்கள், கதவுகள், சுவற்றில் வேலைப்பாடுகள் என்று நுணுக்கமாக ரசித்துவிட்டு , பிறகு அந்த மாளிகைகள் அனைத்தையும் தகர்த்தெறிந்து விட்டு காமத்தின் தரையில் நின்றுகொண்டு உரையாடினால் இந்த சிறுகதை போல் இருக்குமோ ?

 

ஒரு கட்டத்தில் யாருக்கு யார் கெய்ஷா என்பது போல் , ஒரு விறுவிறுப்பான விளையாட்டின் இறுதிசுற்றுக்கு அழைத்து சென்றுவிட்டு, வென்றது யார் என்று வாசகர்களிடம் விட்டு விட்டீர்கள். மிக அருமை.

 

முதலில் ‘சூரியனுடன் தொற்றிக்கொள்ளுதல்’ , இரண்டாவதாக ‘கெய்ஷா’.  ஜப்பானின் கலாச்சாரம் சார்ந்த இன்னும் ஒரு பத்து சிறுகதைகளாவது நீங்கள் எழுத வேண்டும். ஒரு தொகுதியாக வெளியிட வேண்டும்..

 

நன்றி.

 

அன்புடன்,

ராஜா,

சென்னை.

 

 

Hi

Short stor

 

கெய்ஷா சிறுகதைy is the worst ever and that didn’t expect this from you Mr. Mohan.

All these days I  misunderstanding a madman as being an enlightened man.
You addressed that Japanese girl as a small boy and that  the Indian men are more inclined towards Gay relationship.
Indian men are really afraid of a real woman .
The idea of Physical immortality will appear more to woman than to men.

 

Regards,
Sheela

 

அன்புள்ள திரு ஜெயமோகன்,

நேற்று உங்களுடைய சிறுகதை கெய்ஷா படித்தேன். உண்மையில் அது ஒரு அதிர்ச்சி மதிப்பீட்டுக்கான கதையாய் இருக்கும். அல்லது செயற்கையான கதையாய் இருக்கும் என்கிற உணர்வில்தான் படித்தேன்.

ஆனால், கெய்ஷா மற்றும் கதைநாயகனின் உரையாடலில் என்னுடைய எண்ணத்தின் நிறம் மாறியது. ஒரு அற்புதமான கதையை படிக்கிறோம் என்கிற உணர்வு என்னுள் வளர்ந்தது.

இயற்கையான மென்மையான மேன்மையான உரையாடல் என்னை வியக்கச் செய்து கொண்டே இருந்தது.

இறுதியில் அந்தக் கதை எப்படி முடிய வேண்டுமோ அப்படித்தான் முடிந்திருக்கிறது. ஆனால், அதை யாரும் எதிர்பார்க்க முடியாது. அந்த முடிவு மிகவும் வியப்பளிப்பதாய், வீரியமானதாய் இருக்கிறது. அந்த முடிவு கதைக்குள் ஏராளமான மலர்களை பூத்துக் குலுங்கச் செய்கிறது.

கதையின் விஷயங்களை விவரித்துப் பேச தயக்கமாய் இருக்கிறது. சுருதி சேர்ந்திருக்கும் ஒரு இசையின் குறுக்கே நம் குரலை வெளியிடுவது அது புகழ்வதற்காகவே என்றாலும் அபஸ்வரமாக அல்லவா போய்விடும்?

உங்கள் உடலில் வளர்ந்திருக்கும் வண்ணச் சிறகுகள் என் கண்களுக்குத் தெரிகின்றன. நீங்கள் பறக்கப்போகிறீர்கள் என்பதை நான் கொண்டாட வேண்டும் போல இருக்கிறது.

நேற்று இரவு அலுவலகம் முடிந்து திரும்பும்போது இந்தக் கதையைப் படித்தேன். அதன்பின் அவ்வளவு நெருக்கமாக உங்களை உணர்கிறேன்.

அன்புடன்,

குமாரநந்தன்.

 

 

அன்புள்ள ஜெ

 

கெய்ஷா சிறுகதை வாசித்தேன். இத்தகைய கதை எப்படி முடியும் எதைச்சொல்லும் என்று ஒரு கணக்கு நம் வாசக அனுபவத்தில் இருந்து வந்துவிடுகிறது. அந்தப்பெண் ஏமாற்றுக்காரியா இல்லையா, இவன் அவளை ஏமாற்றுகிறானா இல்லையா என்பது ஒரு சரடு. இந்தக்கதை செக்ஸ் பற்றி எதையாவது சொல்லப்போகிறதா என்பது இன்னொன்று

 

கதை அப்பட்டமாகப்பேசிச் செல்கிறது. உண்மையில் செக்ஸின் அர்த்தம் என்ன, எதுவரை அதுபோகும் என்பதெல்லாம் பேசப்படுகிறது. செக்ஸைப்பற்றி பேசிப்பேசிச்சென்று மனிதனுக்குத்தேவை உண்மை அன்பு மட்டும்தான், பெண்ணிடமிருந்து மனிதன் எதிர்பார்ப்பது அதுதான் என்று முடிகிறது. சொல்லப்போனால் அன்புதான் செக்ஸை தீவிரமாக ஆக்குகிறது. அன்புதான் செக்ஸில் இருக்கும் ஒரே ஒரு டெக்னிக்

 

ஆனால் அதை கெய்ஷா வழங்கமுடியாது. அவள் அதை அவனுக்கு உணர்த்திவிட்டு நீ தேடி அடையவேண்டியது இதுதான் முட்டாளே என்று சொல்லிவிட்டுச் செல்கிறாள். அவள் ஒரு தேவதை. வானத்திலிருந்து வந்தவள். அவள் இங்கே இவனுக்குத்துணைவியாக இருக்கமுடியது. அவள் இதேபோல அனைவருக்கும் அவருக்குத்தேவையான ஒன்றை கண்டுபிடித்து கொடுத்துவிட்டு போய்க்கொண்டே இருப்பாள்

 

சபா குழந்தைச்சாமி

 

 

கெய்ஷா சிறுகதை

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 24
அடுத்த கட்டுரைசிறுகதைகள் கடிதங்கள் – 2