அம்மோக்கியோ சந்திப்பு

DSC_7210

 

அம்மோக்கியோ நூலக அறை எனக்குப் புதியதல்ல. முன்னர் இரண்டுமுறை அங்கே விரிவான உரையும் உரையாடலும் நிகழ்ந்துள்ளன. இன்று மாலையில் நிகழ்ச்சி இருப்பதை காலை பத்துமணிவரை நினைவுகூரவே இல்லை. வெண்முரசு எழுதிக்கொண்டிருந்தேன். நேற்று நண்பர் மகாலிங்கம் பரணி ஆகியோருடன் சிங்கப்பூர் அருங்காட்சியகம் சென்றிருந்தேன். திரும்பி வர இரவு ஒன்பது. அதற்குமேல் வெண்முரசின் ஒர் அத்தியாயத்தை முடித்தபின் இரவு மூன்றரைக்கே தூங்கினேன். காலையில் அந்தச்சோர்வு இருந்தது. ஆயினும் நாவலின் ஈர்ப்பு என்னை எழுதச்செய்தது

மூன்றுமணிக்கு படுத்து கொஞ்சம் தூங்கினேன். சரவணன் வந்தார். அவருடன் கிளம்பி அம்மோக்கியோ நூலகம் சென்றேன். அங்கே எனக்காக வாசகர்கள் வந்து காத்திருந்தனர்.பலரும் நன்கு முகம் தெரிந்த நண்பர்கள். சிங்கப்பூர் கணக்குக்கு நல்ல கூட்டம் என்றுதான் சொல்லவேண்டும்.நான் பேரிலக்கியம் குறித்துப் பேசுவேன் என சித்ரா அறிவித்தார்

செவ்விலக்கியம் பேரிலக்கியம் என்னும் சொற்களைப்பற்றிச் சொன்னேன். ஒரு பண்பாட்டில் செவ்விலக்கியம் எப்படி உருவாகிறது, அதன் அழகியல் இயல்புகள் என்ன, அதன் தேவை என்ன என்று பேசி நவீனக் காலகட்டத்தில் செவ்விலக்கியம் சாத்தியமா, அதன் இடம் என்னவாக இருக்கமுடியும் என்பதுபற்றி விளக்கினேன். அதன்பின்னர் கேள்விபதில்.

 

நிறைவான நிகழ்ச்சியாக இருந்தது.

 

புகைப்படங்கள்

நன்றி வெங்கடாச்சலம் ஏகாம்பரம்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 34
அடுத்த கட்டுரைகைவிடுபசுங்கழை -கடிதம்