இன்று இரவு நண்பர்களும் எழுத்தாளர்களுமாக 17 பேர் கூடி ஆந்திராவுக்குச் செல்கிறோம். ரயிலில் ராஜமுந்திரி சென்று அங்கிருந்து கோதாவரியை அடைகிறோம். கோதாவரியில் ஒரு படகில் ஒருநாள் முழுக்க பயணம். அங்கிருந்து ஒரு சிறு காடு. அங்கே ஒருநாள் தங்கிவிட்டு திரும்பி மீண்டும் கோதாவரி வழியாக விஜயவாடா. ஒருவாரமாகும் திரும்ப. நண்பர் ராமச்சந்திர ஷர்மாவின் ஏற்பாடு. போவது அவரது சொந்த ஊருக்குத்தான்.
கோதாவரியை பலமுறை பார்த்திருக்கிறேன். இது அவளுடன் பழகுவதாக அமையும் என நினைக்கிறேன்