தேசம் -கடிதம்

 

1

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

அறம் கதைகள் மூலம் தாங்கள் எனக்கு அறிமுகமாகி உங்களை தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன். நான் பெரிய இலக்கிய வாசகன் இல்லை. இன்னும் சொல்லப்போனால் உங்கள் தளத்தை மட்டுமே பெரும்பாலும் வாசித்துக்கொண்டிருக்கிறேன். தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன். உங்கள் தளத்தில் அனுபவம் என்னும் சுட்டியின் கீழ் உள்ள கட்டுரைகளை வாசிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். உங்கள் அனுபங்களை என் கணினியின் மூலமே இலவசமாக பெற்றுக்கொண்டு விசாலமடைந்து கொண்டிருக்கிறேன்.

அன்னையின் சிறகுக்குள் வாசித்தேன். என் வாழ்வின் கனவுகளில் ஒன்று இந்தியா முழுவதும், ஒவ்வொரு ஊருக்கும் பயணம் செய்ய வேண்டுமென்பது. அவ்வாறு சிந்திக்கையில் என்ன வாகனம் வாங்கிக்கொள்ளலாம் எவ்வளவு பணம் சேர்த்துக்கொள்ளலாம் எவ்வளவு நாட்கள் விடுமுறை வேண்டும் என்றெல்லாம் யோசிப்பதுண்டு. ஆனால் தாங்கள் ஹல்த்வானியில் வெறும் 5 ரூபாய்க்கும் கீழாக வைத்துக்கொண்டு சாலைகளில் அலைந்ததை படித்து வியக்காமல் இருக்கமுடியவில்லை.

ஒரு துறவிக்கு சாத்தியமான மனநிலை தங்களுக்கும் சாத்தியமாக இருந்திருக்கிறது என்னும்போது வியக்காமல் இருக்கமுடியவில்லை. நான் இதை எழுதுவதற்கு காரணம் உங்களுக்கு நன்றி கூறவே. உங்கள் எழுத்துக்களால் என் மனம் நிம்மதியும் விசாலமும் கொள்கிறது என்று கூறவே.

நன்றியுடனும், அன்புடனும்,

முருகன்.

 

அன்புள்ள முருகன்

நான் எப்போதும் சொல்வது ஒன்றுண்டு, நேரடியான இந்திய தரிசனம் என்பது ஒருவகையில் சுயதரிசனமேதான்

இங்கு பேசப்படும் அனைத்து பிரிவினை வாத குறுகிய அரசியலையும் கடந்து நம் இறந்தகாலத்தையும் பண்பாட்டையும் முழுமையாகவே பார்த்துவிடமுடியும்

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 9
அடுத்த கட்டுரைதேசிய கல்விக்கழகத்தில்