அன்புள்ள ஜெ,
கபாலிக்காய்ச்சல் குறித்து உங்களின் உக்கிரமான பதிவைக் கண்டேன். மகிழ்ச்சி. உண்மையில் நான் கூட்டுக்கேளிக்கைக்கு எதிரானவன் அல்ல. திரைப்படங்களின் விளைவுகளை மையப்படுத்திதான் இந்தக் கருத்தியலையும் வைத்தேன். ஆனால் நீங்கள் எல்லாவிதமான கேளிக்கைகளையும் நான் வெறுப்பதுபோல் எழுதியிருக்கிறீர்கள். என்னை ஏதோ மனிதகுலம் காணா விசித்திரஜீவிபோல உருவகப்படுத்திவிட்டீர்கள்.சுந்
அவை வணிகமென்றும், காலப்போக்கில் மாறுமென்றும் நீங்கள் சொல்கிறீர்கள். அதன் விளைவுகளை அரசியலில் திராவிட இயக்கந்தொட்டு அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். அவை கூட்டுக்கேளிக்கைகள் வெறுமனே கடந்துசெல்லப்பட்டதால் ஏற்பட்டதா? திரைப்படங்களில் நாயகன் செய்வதெல்லாம் உண்மையென்று நம்பிய கூட்டுக்கேளிக்கையின் விளைவில்லையா? தமிழகத்தில் பியூஸ் மானுஷோ,அரவிந்த் கெஜ்ரிவாலோ, அன்னா ஹசாரேவோ அரியணை ஏற முடியுமா? தமிழகத்தில் நடிகைகளுக்கு கோவில் கட்டப்பட்டிக்கிறதே? சமீபத்தில் ஏதோ கடைதிறப்பிற்கு வந்த நடிகையைப் பார்க்கச் சென்று நம் இளைஞர்கள் காவலர்களிடம் தடியடி வாங்கினார்களே? இவை வெறுமனே கடந்துசெல்லப்பட்ட கூட்டுக்கேளிக்கையா? கூட்டத்தோடு அமர்ந்து படம் பார்ப்பது, கிரிக்கெட் பார்ப்பது, புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு ஆடுவது, விசில் அடிப்பது, கத்துவது, கூட்டமாக மது குடிப்பது அதன் லயத்தோடு பழைய நினைவுகளை மீண்டெடுத்து பேசிச் சிரிப்பது அல்லது அழுவது எல்லாம் எனக்கும் பிடிக்கும். ஆனால் அந்தக்கணங்கோடு அவை முடிந்தால் நன்றாய் இருக்குமென்று நினைக்கிறேன். ஆனால் வாழ்க்கை முழுக்க அதையே பிடித்துக்கொண்டு தொங்குவதுதான் இங்கு நடக்கிறது. அதன் விளைவுகள் நிச்சயமாய் மிகச் சுலபத்தில் கடந்துசெல்லத்தக்கவையல்ல.
அன்புடன்,
அகில் குமார்
www.itzmeakhil.blogspot.com