ரஃபி சாஹிபும் மறையும் விண்மீன்களும்

ரஃபி  சாஹிப் என் வாழ்க்கையின் அருந்துணை. ஒருபோதும் ரஃபி என்று மட்டும் சொல்ல மனம் குவிந்ததில்லை. இன்று, வெண்முரசின் மிகக்கொடூரமான ஓர் அத்தியாயத்தை எழுதியபின் அவரது இனிய துயர் கொண்ட குரலில் ஆழ்ந்திருக்கிறேன். குறிப்பாக இந்தப்பாடல்.

1956 lவெளிவந்த சந்திரகாந்தா என்னும் படம். இசை. என்.தத்தா. பாடல். சாஹிர் லுதியானவி

Rafi_splash

நான் விண்மீன்களுக்காகவும் நிலவுக்காகவும் ஏங்கினேன்
இரவின் இருளையன்றி எதையும் காணவில்லை
காதலுடன் முயங்காத பாடல் நான்
இலக்கில்லாது செல்லும் பயணி நான்
புண்பட்டவன், புதுவசந்தத்திற்காக ஏங்குகிறேன்
அக்கூந்தலில்லை இன்று. அதன் சரிகையிழை இல்லை
மறைந்துகொண்டிருக்கும் ஒரு விண்மீன் கூட இல்லை
ஏங்குகின்றன என் விழிகள்
அவள் பாதை என்னிடமிருந்து விலகிச்சென்றது
இன்று அவள் உருவமும் மாறிப்போயிற்று
அவளிடமிருந்து அன்புக்காக ஏங்குகிறது என் உள்ளம்
நான் அன்புக்காக ஏங்கினேன்
விம்மல்களையே பெற்றேன்
அமைதிக்காக விழைந்தேன் புயல்களை பெற்றேன்
மூழ்கும் என் இதயம் கரைகளை நாடுகிறது
பயனற்ற நம்பிக்கைகளின் குவியல் என் நெஞ்சு
ஒளியை நாடிச்சென்றேன் இருளையே கண்டேன்
வண்ணங்களை விண்ணகத்தின் ஒளியை நாடினேன்
நான் விண்மீன்களுக்காகவும் நிலவுக்காகவும் ஏங்கினேன்
இரவின் இருளையன்றி எதையும் காணவில்லை

யூடியூபில் இப்பாடலுக்குக் கீழே ஒரு கருத்துக்குறிப்பை பார்த்தேன். சையத் ஜாஃப்ரி ஒரு மாதம் முன்பு எழுதியிருந்தார்

photo

Syed Jafri1 month ago

I listened this song in 1960 on radio (Radio Ceylon, at that time), I was just 11 years old with emotions. I still remember my emotions which are still with me and unfortunately I am a man without a true woman in the age of 66 inspite of my fully devoted love. I have nothing to say except that I am a lost person.

சகோதரா, ரஃபி சாகிப் உடனிருக்கட்டும்.

ஜெ

முந்தைய கட்டுரைநெல்லை கடிதங்கள் -2
அடுத்த கட்டுரைகாமத்தின் கலை, பரதனின் நினைவில்…