வணக்கம்.
தேவதேவன் கவிதைகளை Desktop Wallpaper ஆக வடிவமைத்திருக்கிறேன். என் ரசனைப்படி 100 கவிதை வரிகளை தேர்ந்தெடுத்து செய்திருக்கிறேன். முடிந்த வரையில் இணையத்தில் பகிர்ந்துவருகிறேன். பல்கலைக்கழக கணிணிக் கூடத்தில் வைத்து வடிவமைத்துக்கொண்டிருந்த சமயத்தில் பல நண்பர்கள் கவிதை வரிகளை ரசித்தனர். 100 wallpaper முடிந்ததும் ஒரு விதமான நிறைவைத் தந்தது.
100 படங்களையும் இங்கே பகிர்ந்துள்ளேன்.
நன்றி.
ஸ்ரீனிவாச கோபாலன்
அன்புள்ள சீனிவாச கோபாலன்
அரிய முயற்சி
இத்தகைய முயற்சிகள் கவிதையின் சிலவரிகள் மேல் மேலதிக கவனம் நீடிக்க வழிசெய்கின்றன. அது அக்கவிதையின் சொற்களை நம் உள்ளத்தின் ஆழத்திற்குக் கொண்டுசெல்கிறது
ஜெ