கோவையில் சங்கரர் பற்றிப் பேசுகிறேன்

1

 

நண்பர்களுக்கு,

வரும் ஜனவரி 3 ஆம் தேதி நான் கோவையில் கிக்கானி அரங்கில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் சார்பில் நிகழவிருக்கும் , ஆன்மீக குருநாதர்களைப்பற்றிய ‘எப்போ வருவாரோ’ என்னும் சொற்பொழிவு வரிசையில் சங்கரர் பற்றி பேசவிருக்கிறேன். சென்றமுறை வியாசர் பற்றிப்பேசினேன் என்பது நினைவிருக்கலாம். மாலை ஆறுமணிக்கு விழா.

சங்கரரின் வரலாற்று இடம், இந்திய சிந்தனைமரபில் அவரது தொடர்ச்சி, அத்வைதத்தின் அடிப்படைகள், பின்னாளில் அத்வைதம் எப்படி இந்திய மறுமலர்ச்சிக்கு தூண்டுதலாக அமைந்தது ஆகியவற்றைப்பற்றிப் பேசப்போகிறேன். வழக்கம்போல முற்றிலும் தீவிரமான உரை. ஆர்வமுள்ளவர்கள் மட்டும் வரலாம்

 

முந்தைய கட்டுரைவிழா 2015 கடிதங்கள் 6
அடுத்த கட்டுரைவரும் ஆண்டும்…