இந்தோனேசியா பயணம் கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்

இந்த கட்டுரையில் “இந்தோனேசியாவின் மொழி முன்பு இந்தியாவின் தொன்மையான வட்டெழுத்து போன்ற எழுத்துருவில் எழுதப்பட்டிருந்தது” என்கிறீர்கள்.

வட்டெழுத்து தமிழை எழுத 6/7ம் நூற்றாண்டு வரை பயன்பட்டது. பல்லவர் காலத்தில் கிரந்தமும், தமிழ் கிரந்தமும் உருவாயின. தற்கால தமிழ் எழுத்து இந்த கிரந்த அடிப்படையில் எழுந்ததுதான். வட்டெழுத்து தென் தமிழகத்தில் இன்னும் சில நூற்றாண்டுகள் பயன் படுத்தப்பட்டது. 10ம் நூற்றாண்டு வாக்கில் கிரந்தத்தமிழ் தமிழகம் முழுவதும் செல்வாக்கு அடைந்தது, வட்டெழுத்து பாண்டிய நாட்டிலும் கைவிடப்பட்டது. கிரந்தத்தமிழ் தமிழில் இல்லாத (சமஸ்கிருத) உயிர், மெய்யெழுத்துகளை கைவிட்டு, கிரந்தத்தில் இல்லாத தமிழ் எழுத்துகளை வட்டெழுத்தில் இருந்து கடன்வாங்கியது.

வட்டெழுத்து கேரளாவில் இன்னும் சில நூற்றாண்டுகள் வாழ்ந்து அங்கும் மறைந்தது. தற்கால மலயாள எழுத்து கிரந்தத்தில் இருந்து வந்ததாகும்.

https://en.wikipedia.org/wiki/Tamil_script
The modern Tamil script does not, however, descend from this script.[8] In the seventh century, the Pallava dynasty created a new script for Tamil, which was formed by simplifying the Grantha alphabet (which in turn derived from Southern Brahmi), and adding to it the Vaṭṭeḻuttu alphabet for sounds not found in Sanskrit.[9

தென் இந்திய எழுத்துகளும், பழைய கால தென்கிழக்குஆசிய எழுத்து முறைகளும் கிரந்தத்தை தழுவியவை

மதிப்புடன்

வன்பாக்கம் விஜயராகவன்

அன்புள்ள ஜெ

இந்தோனேசியப் பயனக்கட்டுரை அற்புதமாக இருந்தது. கடைசியில் அந்த சிவதரிசனம் அற்புதமானது. எரிமலையாக திருவன்ணாமலையைப்பார்க்க ஒரு பரவசம் வரத்தான் செய்கிறது. அதுவும் கார்த்திகை தொடங்கிவிட்டது. தீபத்துக்குச் சென்றே ஆகவேண்டும் என்னும் எண்ணத்தை ஏற்படுத்தியது கட்டுரை

சந்தானம் ஆர்

அன்புள்ள ஜெமோ

பயணக்கட்டுரை மிகச்சிறப்பு. புற்றுக்குள் இருப்பதுபோல ஸ்தூபிக்குள் இருக்கும் புத்தரின் படங்கள் சிலிர்க்கவைத்தன. மறைந்திருப்பதனாலேயே அவை மிகுந்த அர்த்தம் கொண்டவையாக ஆகிவிட்டன என்று தோன்றியது.

சிவராஜ்

அன்புள்ள ஜெ

இந்தோனேசியப்பயணக்கட்டுரை மிகச்சிறப்பாக இருந்தது. எரிமலைகளும் கோயில்களும் கலந்த ஒரு நிலப்பரப்பு ஒரு கனவு என்று தோன்றியது. அற்புதமான அனுபவம். உங்களுடன் சேர்ந்தே வந்ததுபோலிருந்தது

ஆனந்த்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 69
அடுத்த கட்டுரைவரலாற்றெழுத்தும் மையக்கருத்தும்