கம்பன் கண்ட மயில்

நெடுங்காலமாகவே கம்பராமாயணம் நம் சூழலில் அறிஞர் மத்தியில் பேசப்பட்டுள்ளது. அதன் பல நுட்பங்கள் பேசிப்பேசிக் கண்டடையப்பட்டவை என்றால் அது மிகையல்ல. ஒருகட்டத்தில் கமபாராமயணம் ரசனையற்ற அரசியல் தாக்குதலுக்கு ஆளானபோது அந்த இலக்கிய உரையாடலை காரைக்குடி சா.கணேசன் கம்பன் கழகம் மூலம் மீண்டும் உருவாக்கினார். அது ஒரு மிகப்பெரிய அலையை உருவாக்கி இன்று செயலற்று அபத்தமான பட்டிமன்றங்களில் சிக்கிக் கிடக்கிறது.

இணையம் போன்ற இன்றைய ஊடகத்தில் கம்பராமாயணம் மறு கண்டுபிடிப்பு செய்யப்பட வேண்டும். கம்ப ராமாயணம் அளவுக்கு முடிவிலாது மூழ்க இடமளிக்கும் தமிழ் இலக்கியம் வேறொன்று இல்லை. இந்திய அளவில் வியாச மகாபாரதத்தை மட்டுமே ஈடு கூற முடியும். காளிதாசன் கூட ஒருபடிகீழே தான். உலக இலக்கியங்களிலேயெ அதற்கிணையாகச் சிலவே உள்ளன என்று நித்ய சைதன்ய யதி கூறுவதுண்டு.

காவியகர்த்தனுக்கு தெரியாதது இல்லை என்பது நம் மொழியின் நம்பிக்கை. காளிதாசன் கம்பன் குறித்து அத்தகைய பல கதைகள் உண்டு. நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை கம்பனில் ஒரு நுட்பத்தைக் கண்டடைந்த கதையை டோண்டு ராகவன் அவரது இணையப்பக்கத்தில் சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறார்

http://dondu.blogspot.com/2010/03/blog-post_3615.html

காமமும் கம்பனும்- ஒரு காலைநேரம்

கம்பனும் காமமும், இரண்டு

கம்பனும் காமமும் :ஒருகடிதம்

கம்பனும் காமமும் 3:அருளும் மருளும் அது

கம்பனும் காமமும்:அணிகளின் அணிநடை

குருதிச்சின்னங்கள்[கம்பனும் காமமும்.5]

முந்தைய கட்டுரைஎந்த வாசகர்களுக்காக?
அடுத்த கட்டுரைகர்மயோகம் : செயலெனும் விடுதலை