அங்காடித்தெரு இன்று

நான் பங்குபெற்று வெளியாகும் நான்காவது படம் அங்காடித்தெரு. இன்று  அது வெளியாகிறது. அதன் முழு வடிவை நான் இன்னமும் பார்க்கவில்லை. முழுமையாக தொகுக்கப்பட்டு இசை சேர்க்கப்பட்டு ஓசைகள் அமைக்கப்பட்ட படம் முற்றிலும் வேறு ஒன்று. பொதுவாக திருட்டு டிவிடி அச்சம் காரணமாக படங்களை கடைசி நேரத்தில்தான் முழுப்படமாக ஆக்குவார்கள்.

காலைக்காட்சிக்கே செல்லலாம் என்று நினைத்தேன். ஆனால் அருண்மொழி நாளை மதியம்தான் வருவாள். அவளும் அஜிதனும் விடுமுறைக்காக திருவாரூர் சென்றிருந்தாள். அவள் வராமல் நான் பார்க்கக் கூடாது என இறுதிக்கட்டளை. ஆகவே நாளை மாலைக்காட்சிக்கு போகலாமென நினைக்கிறேன்.

நாகர்கோயில் போன்ற ஊர்களில் என்ன பிரச்சினை என்றால் முதல்நாள் படம் பார்க்க வருபவர்கள் எல்லா படங்களையும் பார்க்கும் ஒரு கும்பல். படம் முழுக்க கத்திக்கொண்டே இருப்பார்கள். அதாவது இந்தப்படம் எப்படிப்போகும் என எனக்கு தெரியும் என்ற அளவில். கொஞ்சம் படம் உணர்வுரீதியாக கனம் கொண்டால்கூட பொறுமை இழப்பார்கள். சில தினங்கள் கழித்து இது இன்னமாதிரியான படம் என்று ஆனபின்னர்தான் அதற்கான ரசிகர்கள் வருவார்கள்.

அப்போது மீண்டும் போய் படத்தைப் பார்க்கவேண்டும்.

http://www.indiaglitz.com/channels/tamil/gallery/m/Movies/angaditheru/674977.html

முந்தைய கட்டுரைவெட்டம் மாணியைப்பற்றி
அடுத்த கட்டுரைமலை ஆசியா – 6