வெண்முரசு நூல்கள் அறிமுக விழா

10712482_1564747160414097_4389790215810145740_o

வெண்முரசு நூல்களான முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம் அறிமுகம்- வெளியீட்டு விழா வரும் நவம்பர் மாதம் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னையில் நடைபெறுகிறது.

நமது காலப் பெரும் இலக்கிய ஆளுமைகள் அசோகமித்திரன்,பி.ஏ.கிருஷ்ணன்,பிரபஞ்சன், நாஞ்சில்நாடன் மற்றும் திரைத் துறைச் சாதனையாளர்கள் கமல்ஹாசன், இளையராஜா, வசந்தபாலன் முக்கிய விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள்.

இதுகுறித்த மேலதிக தகவல்களும், விரிவான நிகழ்ச்சி நிரலும் விரைவில் வெளியிடப்படும்.

விழாவில் இலக்கிய ஆர்வலர்கள் நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.

-விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்

நாள் : நவம்பர் 9, 2014, ஞாயிற்றுக்கிழமை.
இடம் : சென்னை ம்யூசியம் தியேட்டர் அரங்கம்
நேரம் : மாலை 5 மணி

தொடர்புக்கு:
பாலா: [email protected]

மேலும் விவரங்களுக்கு, ஃபேஸ்புக் பக்கம்
https://www.facebook.com/events/718581131563039/

வெண்முரசு நாவல் தொடர்பான அனைத்து விவாதங்களும்

முந்தைய கட்டுரைபாபநாசம் – படப்பிடிப்பின் முடிவில்
அடுத்த கட்டுரைவெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 10