கிழக்கில் என் நூல்கள்

கிழக்கு வெளியீடாக என்னுடைய நான்கு நூல்கள் மறுபதிப்பாவாதாக ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். இன்று இரு நூல்கள் வெளிவந்துள்ளன. புத்தகச்சந்தையில் கிடைக்கும். மீதி இருநூல்களும் நாளை கிடைக்கலாம். கவிதா வெளியீடாக வந்து கிடைக்காமல் இருந்த இந்நூல்களை கிழக்கு வெலியிடுவதாக இருந்தது. நான் நேரம் ஒதுக்க முடியாத காரணத்தால் தாமதமாக வெளியாகின்றன

1  இந்துஞான மரபில் ஆறு தரிசனங்கள்

இந்திய மெய்ஞான மரபின் ஆறுதரிசனங்களைப்பற்றி எளிய அறிமுக நூல். இந்த தரிசனங்களே இந்து ஞானமரபின் தத்துவ அடித்தளங்களை அமைத்தவை. இவற்றில் நான்கு இறை சாராதவை. அதனாலேயே  நுண்தளத்தில் மட்டுமே பேசப்பட்டு பெருவாரியான இந்துக்களால் அறியப்படாது போனவை

 

2  வாழ்விலே ஒரு முறை

சிறிய அனுபவங்களை புனைவுத்தன்மையுடன் கூறும் இந்நூல் அவற்றினூடாக வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக பரிசீலிக்க முனைகிறது

முந்தைய கட்டுரைஅங்காடித்தெரு ஒத்திவைப்பு…
அடுத்த கட்டுரைநாவல்,முன்னுரை