தமிழறிஞர்கள் எங்கே?

பத்து நாட்களுக்கு ஒருமுறை ஏதாவது ஒரு தமிழ் எழுத்தாளர் ‘சம்ஸ்கிருதம் அழிந்துவிட்டது’ என குதூகலிப்பதை வாசிக்கிறேன். சம்ஸ்கிருதம் அறிவியக்கத்துக்குரிய மொழி. அதற்காகவே ஆக்கப்பட்டது. மக்கள் மொழியான தமிழில் அறிவியக்கம் ஒன்று ஈராயிரமாண்டுகளாக நிகழ்ந்து வந்திருக்கிறது. இந்த தலைமுறையில் அது அழிந்துவருகிறது. இன்னும் ஒரு தலைமுறையில் அது இருக்குமா என்பதே ஐயத்துக்குரியது. அதைப்பற்றியும் எவராவது கவலைகொண்டால் நல்லது.

இன்றைய போக்கில் போனால் நாளை தமிழ் வெறும் பேச்சுமொழியாக மட்டுமே சுருங்கிவிட வாய்ப்பதிகம். காரணம் இன்று தமிழ்தெரிந்தவர்கள் குறைந்து வருகிறார்கள். தமிழறிஞர்கள் அறவே அழியும் நிலையில் உள்ளனர். கல்லூரிகளுக்குச் சென்று அங்குள்ள தமிழ் மாணவர்களைக் கண்டால் பரிதாபம் எழுகிறது. தமிழ் பேராசிரியர்களோ குமட்டலை உருவாக்குகிறார்கள்

நம் நிலை என்ன என்று காட்ட யாராவது வந்து பொட்டில் அறையவேண்டியிருக்கிறது. ஆகவே ஒரு சுட்டி.

‘Most Indian universities do not focus on training and grooming of young scholars in this field.” The Department of Tamil from Kerala University is an exception, and most scholars for NETamil have been recruited from there’ என்கிறார்

செம்மொழியான தமிழை மூச்சடக்கிக் கூவிக் கொண்டாடும் தமிழகத்தில் இந்த வரியின் உண்மையான பொருளை எவரேனும் உணர்கிறார்களா?

இந்த இழிவு ஏன் என்பதற்கு கீழே நெடுஞ்செழியன் என்ற ஆசாமி போட்டிருக்கும் பின்னூட்டமே சான்று. TN govt is run by outsiders. All the political parties in Tamil Nadu are other state people என காரணம் சொல்கிறார்!

நான் ஊழல் செய்ய, நான் முட்டாளாக இருக்க, என் வீட்டில் குப்பை குவிந்திருக்க என் மொழியும் பண்பாடும் அழிகையில் நான் ஊழலில் திளைத்து சும்மா இருக்க அண்டைவீட்டானே காரணம் என்ற மனநிலை. அண்டை வீட்டில் என் வீட்டை விட என் மொழி வாழ்வதற்கு வேண்டுமென்றால் நானே காரணம் என்பேன்!

அனேகமாக உலகில் வேறெங்கும் இப்படி ஒரு மோனநிலையைக் காணமுடியாது என்று படுகிறது

தமிழறிஞர்களுக்கும் தமிழுக்கும் செலவிடப்படும் கோடிக்கணக்கான ரூபாய் ஒரு சின்ன அளவு த்ரீ ஜி என்று தோன்றுகிறது. ஒரு கலைச்சொல்லாக டமில்-ஜி என்றால் என்ன?

முந்தைய கட்டுரைசு.கிருஷ்ணமூர்த்தி- நரசய்யா
அடுத்த கட்டுரைவரலாற்றை வாசிப்பதன் விதிகள்