அறியாமை, இயலாமை, முயலாமை, சுயநலம் மற்றும் அலட்சியம் ஆகியவையே மனிதர்களின் இத்தகைய நடத்தைக்கான காரணமாக இருக்கின்றன. இவற்றையெல்லாம் தாண்டியும் அவ்வப்போது நல்லவை நடப்பது யானைடாக்டர், பூமேடை போன்ற நல்ல மனிதர்கள் காலந்தோறும் தோன்றியபடி இருப்பதால்தான். அவர்களை நாம் அடையாளம் காணாவிடினும், அங்கீகரிக்காவிடினும் முடிந்தவரை புறக்கணிக்காமல் இருக்க வேண்டும் என்பதையே இக்கதைகள் நம்மை சிரம் தாழ்த்தி வேண்டிக் கொள்கின்றன. – See more at: http://kesavamanitp.blogspot.in/2014/08/blog-post_16.html#sthash.X0gSJfod.dpuf