பர்மா குறிப்புகள் வெளியீட்டு நிகழ்வு

அன்புடையீர்,

செ. முஹம்மது யூனூஸ் அவர்களின் எனது பர்மா குறிப்புகள் என்ற நூல் சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியாகிறது.

நாள்: 31 டிசம்பர் 2009, மாலை 6:30
இடம்: காலச்சுவடு அரங்கம், செயிண்ட் ஜார்ஜ் பள்ளி வளாகம், பச்சையப்பன் கல்லூரி எதிரில், பூந்தமல்லி நெடுஞ்சாலை, அமிஞ்சிக்கரை, சென்னை-30

வெளியீட்டு நிகழ்வுக்கு வருமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

டிசம்பர் 30, 2009 முதல் ஜனவரி 10, 2010 வரை நடைபெறவிருக்கும் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் காலச்சுவடு அரங்கில் நூல் கிடைக்கும்.

நூல் அறிமுகம் கீழே:

எனது பர்மா குறிப்புகள்


செ. முஹம்மது யூனூஸ்


தொகுப்பு: மு இராமனாதன்

செ. முஹம்மது யூனூஸ், நாற்பதாண்டுகளுக்கு முன்னால் பர்மாவிலிருந்து ஹாங்காங்கிற்குப் புலம் பெயர்ந்தவர். அதற்கு முன்னர், அவர் நாற்பதாண்டுகள் வாழ்ந்த, பிறந்து வளர்ந்த ‘பர்மியத் திருநாட்’டைப் பற்றி இந்த நூலில் சொல்கிறார். தமிழர்கள் பர்மாவில் செல்வாக்கோடு வாழ்ந்த காலத்தில் தொடங்குகின்றன யூனுஸின் பதிவுகள். இரண்டாம் உலகப் போர், ஜப்பானிய ஆக்கிரமிப்பு, நேத்தாஜியின் இந்திய சுதந்திர லீக், பர்மீயர்களின் விடுதலை, ராணுவ ஆட்சி, இந்தியர்கள் நேரிட்ட வாழ்வுரிமைச் சிக்கல்கள் என்று தொடரும் இப் பதிவுகள், கணிசமான இந்தியர்கள் பர்மாவிலிருந்து வெளியேற நேர்ந்தது வரை நீள்கிறது. இந்தக் குறிப்புகள் பர்மீயத் தமிழர்களின் வாழ்வு, கலாச்சாராம், கலை, இலக்கியம் அனைத்தையும் தொட்டுச் செல்கிறது. தான் வாழ்கிற சமூகத்தைக் குறித்த அக்கறையும், சக மனிதர்கள் மீது எல்லையற்ற நேசமும் கொண்ட யூனூஸின் பதிவுகள்,  ஒரு காலகட்டத்தின் சமூக வாழ்வையும் வரலாற்றையும் ஒரு சேரச் சொல்லிச் செல்கிறது; புலம் பெயர் வாழ்வின் உவப்பையும், அலைந்துழல்வையும் படம் பிடிக்கிறது. பர்மீயத் தமிழ் வாழ்வு குறித்த பதிவுகள் மிகக் குறைவாக உள்ள சூழலில், இந்த நூல் ஒரு பெட்டகமாக விளங்கும்.

வெளியீடு:
காலச்சுவடு பதிப்பகம்,
669, கே. பி. சாலை, நாகர்கோவில் 629 001, தொலைபேசி: 91-4652-278525, தொலைநகல்: 91-4652-231160, 402888 மின்னஞ்சல்: [email protected]

முந்தைய கட்டுரைபனிமனிதன் ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைதமிழினி வெளியிடும் ஜெயமோகன் நூல்கள்