தமிழ்கவிதைகள்.காம்

நாங்கள் www.tamilkavithaikal.com எனும் இணைய தளம் துவங்கியிருக்கிறோம்.

இது கவிஞர்களுக்கான இணையதளம்

கவிஞர்களுக்காக கவிஞர்களால் நடத்தப்படும் இணையதளம்.

கவிதையை சுவாசிப்பவர்களும் கவிதையை நேசிப்பவர்களும் கவிதையை வாசிப்பவர்களும் இந்த இணைய தளத்தில் பங்கெடுக்கலாம்.

கவிஞர்களின் புதிய கவிதைகள் இங்கே வெளியிடப்படும்.

கவிதை உலகில் நடைபெறும் கூட்டங்கள், கவியரங்கங்கள், புத்தக வெளியீடுகள் இவைகளைப் பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்படும்.

அன்றாடம் வெளியாகிக் கொண்டிருக்கும் கவிதைத் தொகுதிகளை நூல் அறிமுகம் செய்து வைக்கும் பணி இங்கே நடைபெறும்.

புதிய கவிதைத் தொகுதிகளுக்கான விமர்சனம் இடம் பெறும்.

கவிதைகளைப் பற்றிய கட்டுரைகள், கவிஞர்களின் நேர்காணல்கள், கவிஞர்களுக்கிடையேயான விவாதங்கள் இடம்பெறும்.

இந்த இணையதளத்தின் சிறப்புப் பகுதியாக கீழ்கண்ட பகுதிகள் இடம்பெறும்.

1.முகவரிக் கவிதைகள் 2. பொக்கிஷக் கடிதங்கள் 3.என் கவிதைகள் 4. எனக்குப் பிடித்த கவிதைகள்

முகவரிக் கவிதைகள் ; ஒரு கவிஞர் சில நூறு கவிதைகள் எழுதியிருக்கின்ற போதும் அவற்றில் சில கவிதைகள் அவர் வாழ்கையில் மிக முக்கியமான கவிதைகளாகிவிடுகின்றன. அதில் ஏதோ ஒரு கவிதையே அவருடைய முதல் கவிதையாக இருக்கிறது. ஏதோ ஒரு கவிதை கல்லூரி அல்லது பள்ளி அளவில் பரிசினை வாங்கிக் கொடுக்கிறது. ஒரு கவிதை மிகவும் பிரபலமாக்கி விடுகிறது. ஒரு கவிதை காதலியைத் தேடித்தருகிறது. ஒரு கவிதை உலகமே அந்தக் கவிதையை ரசிக்கா விட்டாலும் தனக்கு மிகவும் பிடித்தக் கவிதையாக இருக்கிறது. தமிழின் முக்கியக் கவிஞர்கள் தனக்கு அவ்விதம் முகவரி தேடித் தந்த கவிதைகளைப் பற்றி இங்கே பேசுகிறார்கள்.

பொக்கிஷக் கடிதங்கள் ; ஒவ்வொரு கவிஞரிடமும் அவருடைய கவிதைத் தொகுப்பைப் பற்றி அல்லது ஒரு கவிதையைப் பற்றி இன்னொரு பிரபல கவிஞர் எழுதிய ஒரு கடிதம் பொக்கிஷமாகப் பாதுகாக்கப் பட்டு இருக்கிறது. அந்தக் கடிதங்களின் தொடர் இந்தப் பகுதியில் இடம்பெற இருக்கிறது.

என் கவிதைகள்

ஒரு கவிஞர் அவர் எழுதிய கவிதைகளில் அவருக்கு மிகவும் பிடித்தமானது என உணரும் கவிதைகளை அவரே தேர்ந்தெடுத்துக் கொடுக்கும் பகுதி இது. இந்தப் பகுதியை வாசிக்கும் ஒருவர் அந்தக் கவிஞரைப் பற்றிய ஒரு எண்ணத்தை உருவாக்கிக் கொள்ள முடியும். அந்தக் கவிஞரின் மற்ற கவிதைகளைத் தேடிப் படிக்கும் ஆர்வத்தை உருவாக்கிக் கொள்ள முடியும்.

எனக்குப் பிடித்த கவிதைகள்

இந்தப் பகுதியில் ஒரு கவிஞர் அவருடைய நீண்ட வாசிப்பில் அவ்வப்போது அவருடைய மனம் கவர்ந்த கவிதைகளை பதிவு செய்யலாம். ஒரே முறையில் எல்லாக் கவிதைகளையும் என்றில்லாமல் ஒவ்வொரு முறையும் சில கவிதைகள் என தேர்ந்தெடுத்துக் கொடுக்கலாம்.

இது போல் இன்னும் பல இனிய பகுதிகள் இந்த இணையதளத்தில் உருவாக இருக்கிறது.

இது வியாபார நோக்கமற்ற நேர்மையான இலக்கிய முயற்சி.

இந்த இணையதளத்திற்கு தங்களுடைய ஆதரவை தரும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மிக்க நன்றி

அன்புடன்,

ஆசிரியர் குழு.

தமிழ்கவிதைகள்.காம்

முந்தைய கட்டுரைகாந்தியும் தலித் அரசியலும் – 3
அடுத்த கட்டுரைக்ரியா இணையதளம்