கல்பற்றா நாராயணன் கவிதைகள்

கவிஞன் ====== பேருந்துக்கு அடியில் விழும் மகனை பிடித்து விலக்க முடியாமல் நின்று பரிதவிக்கும் அவனைபெற்றதுமே இறந்த அன்னையைப்போன்றவன் நான். எனக்கில்லை அதற்கேற்ற கையோ பலமோ. ******** உறுதியான நிலமல்லவா பயங்கரம்! ========================= மண்ணை நோக்கி பயந்து அலறுவதுண்டு ஒரு பைத்தியக்காரி. மேலிருந்து கீழே விழுகின்றவள் நிலத்தில் மோதித் தலைசிதறித்தானே இறக்கிறாள்? நிலத்தை அடைவதுவரை அவளுக்கு ஒன்றும் நிகழ்வதில்லையே? பின்னுக்கு சென்ற உயரமல்ல பின்னுக்குச்செல்ல மறுத்த நிலமல்லவா அவளைக் கொன்றது? உயரத்தின் சதுப்பல்ல நிலத்தின் உறுதியல்லவா அவளுக்கு … Continue reading கல்பற்றா நாராயணன் கவிதைகள்