விஷ்ணுபுரம் விருது 2012

இவ்வருடத்திற்கான விஷ்ணுபுரம் விருதைக் கவிஞர் தேவதேவனுக்கு அளிப்பதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஓர் இலையைக்கொண்டு ஒரு கானகத்தை உருவாக்குகிறேன் என்று தேவதேவன் ஒருமுறை சொன்னார். அவரது மொத்த கவியுலகமும் ஓர் இலை. மானுடனை ஒரு துளிச்சிதறலாக உணரச்செய்யும் பெரும்கானகமொன்றை சுட்டிநிற்கின்றது அது

தேவதேவனுக்கு இவ்விருதை அளிப்பதில் பெருமைகொள்கிறோம். இது விஷ்ணுபுரம் அமைப்பின் மூன்றாவது விருது. முதல் விருது 2010இல் எழுத்தாளர் ஆ.மாதவனுக்கு வழங்கப்பட்டது. இரண்டாவது விருது 2011இல் எழுத்தாளர் பூமணிக்கு வழங்கப்பட்டது.

மூத்த எழுத்தாளர்களை கௌரவிக்கும் முகமாக அடுத்த தலைமுறையினர் அளிக்கும் விருது என்பதே இவ்விருதின் சிறப்பு. இந்த விருதை ஒட்டி தேவதேவனைப்பற்றிய நூல் ஒன்றும் வெளியிடப்படும்.

வரும் 22- 120 2012 அன்று மாலை கோவையில் விழா நிகழ்கிறது. விஷ்ணுபுரம் அமைப்பின் நண்பர்கள் பல ஊர்களிலிருந்தும் வந்து கூடுகிறார்கள். 23 ஆம் தேதியும் அங்கே தங்கியிருந்தபின் திரும்புகிறார்கள். வழக்கம்போல இது ஒரு வருடாந்தர கல்யாணக் கொண்டாட்டம்.

தேவதேவனுக்காக ஓர் இணையதளம் நம் நண்பர்களால் நடத்தப்பட்டு வருகிறது. தேவதேவன் கவிதைகளை அது தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது.

தொடர்புக்கு [email protected]

தேவதேவன் இணையதளம்


தேவதேவன் விக்கி

முந்தைய கட்டுரைஒழிமுறி கோவாவில்
அடுத்த கட்டுரைஅம்பேத்கரின் தம்மம்- 1