என்னை அறியாமல் என்னைத் தொற்றிக்கொண்ட ஒரு நல்ல பழக்கம், புத்தகம் படிப்பது. கொஞ்சம் வறட்சியாய்ப் போன வாழ்க்கையை நடதிக்கொண்டிருக்கும்போது நல்ல துணையாக அமைந்திருக்கும் இந்தப் புத்தகங்கள். சின்ன வயதில் உருவான இந்தப் பழக்கத்திற்கு இப்போது நன்றி சொல்கிறேன்.
இந்த வலைப்பூ, நான் படித்த புத்தகங்களையும், அவற்றுடனான என் அனுபவங்களையும், அவற்றைப் படிக்கும்போது, படித்தபின் நேர்ந்த அனுபவங்களையும் பற்றிச் சொல்லக் கிடைத்த நல்ல வாய்ப்பாக இருக்கட்டும்.