ஃபோர்டு பவுண்டேஷனைப்பற்றி நான் இந்தத் தளத்தில் எழுதியிருக்கிறேன். பச்சைத்தண்ணீரை மென்று தின்னும் குழந்தைக்குக் கூடத் தெரியும் ஃபோர்டு பவுண்டேஷன் என்றால் என்ன, எதற்காக, யாருக்காக என்று. இருந்தாலும் எத்தனையோ அந்தர்பல்டிகள், சமாளிப்புகள். இந்திய அறிவுஜீவிகளின் பெரும்பாலான மூளைத்திறன் இந்தவகை சமாளிப்புகளுக்கே செலவிடப்பட்டுவிடுகிறதென நினைக்கிறேன். ஃபோர்டு பவுண்டேஷனும் இந்திய அரசும் ஒன்றேதான் என்ற வகையில் கூட விளக்கங்கள் வந்தன.
சுரேஷ் என்ற வாசகர் இந்த இரு இணைப்புகளை அனுப்பியிருந்தார். ஃபோர்டு பவுண்டேஷனுக்கும் சி.ஐ.ஏவுக்குமான நேரடியான உறவைப்பற்றியது ஒரு சுட்டி. ஃபோர்டு ஃபவுண்டேஷனை இந்திய அரசு எப்படி அணுகுகிறது என்பது இன்னொரு சுட்டி.
சொந்தச் சமரசங்கள், சொந்த அயோக்கியத்தனங்கள் வழியாக அல்லாமல் நேர்மையான ஆர்வத்தின் வழியாகப் பார்க்கவிரும்புபவர்கள் இந்த இணைப்புகளை வாசிக்கலாம் . உண்மையை அறியலாம்.
போர்டு பவுண்டேஷனும் சி ஐ ஏவும் ஜேம்ஸ் பெட்ராஸ்
[ இக்கட்டுரையை கூகிள் மொழியாக்கத்தில் தமிழிலும் வாசிக்கலாம்]
இந்திய அரசும் ஃபோர்டு பவுண்டேஷனும்
அன்னியந்தி கடைசியாக
ஆய்வுலகின் அன்னியக்கரங்கள்
எம்டிஎம்மின் கேள்விகள்
திரு ராஜதுரைக்கு உதவும் கரங்கள்