சு.வெங்கடேசனுக்கு சாகித்ய அகாடமி விருது

இவ்வருடத்தைய சாகித்ய அக்காதமி விருது காவல்கோட்டம் நாவலை எழுதிய சு.வெங்கடேசனுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழில் சாகித்ய அக்காதமி விருது பெறும் எழுத்தாளர்களிலேயே இளம் வயதினர் சு.வெங்கடேசன். காவல்கோட்டம் அவரது முதல் நாவல் என்பது மட்டுமல்ல வெளிவந்த ஒரே இலக்கிய ஆக்கமும் கூட. எல்லா வகையிலும் முக்கியமான விருது.

வெங்கடேசனின் காவல்கோட்டம் மதுரையை நாயக்கர்கள் கைப்பற்றியதும் அங்கே காவல்புரிந்து வந்த கீழக்குயில்குடி வட்டாரப் பிறமலைக்கள்ளர்கள் அதன் காவலுரிமையை இழந்து பின்னர் அதைப் பெறும் சித்திரத்தில் ஆரம்பிக்கிறது. மதுரையின் காவலர்களாகிய அவர்களே திருடர்களாக ஆக நேர்ந்ததைச் சொல்லிக் குற்றப் பரம்பரைச்சட்டம் உருவான வரை வந்து அதற்கு எதிரான போராட்டங்களை விவரித்து முடிகிறது. தமிழின் வரலாற்று நாவல்களில் முக்கியமான ஆக்கம் இது

சு.வெங்கடேசன் மார்க்ஸிய கம்யூனிஸ்டுக்கட்சி முழுநேர ஊழியர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலச்செயலாளர். காவல்கோட்டம் வசந்தபாலன் இயக்கத்தில் அரவான் என்றபேரில் திரைப்படமாக வெளிவரவிருக்கிறது

[அரவான்]

சு.வெங்கடேசனுக்கு வாழ்த்துக்கள் , என் சார்பிலும் இவ்விணையதளத்தை நடத்தும் நண்பர்கள் சார்பிலும்


சு.வெங்கடேசன் பேட்டி

அரவான்

சுவெங்கடேசன் கடிதங்கள்


வெண்ணிலை, காவல்கோட்டம் விருதுகள்


காவல்கோட்டம்



காவல்கோட்டம் ஜெயமோகன் 1

காவல்கோட்டம் விமர்சனம் 2

காவல்கோட்டம் 3


காவல்கோட்டம் 4

காவல்கோட்டம் 5

முந்தைய கட்டுரைவிழா:கோபி ராமமூர்த்தி
அடுத்த கட்டுரைவிழா: இளங்கோ