சாரல் விருது

ராபர்ட்-ஆரோக்கியம் நினைவாக இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி அளித்துவரும் 2012 ஆம் வருடத்திற்கான சாரல் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வண்ணதாசன், வண்ணநிலவன் இருவருக்கும் விருது அளிக்கப்படுகிறது விழா 2012 ஜனவரி மாதம் 7 ஆம் தேதி சென்னை தேவநேயப்பாவாணர் அரங்கில் நடைபெறுகிறது. சிற்பி வித்யாசங்கர் வடிவமைத்த சிற்பமும் ரூ 50000 மும் அடங்கியது விருது. நாஞ்சில்நாடன், பா.செயப்பிரகாசம்,எஸ்.ராமகிருஷ்ணன், நா.முத்துக்குமார் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.விழாவில் ஜேடி ஜெர்ரி இயக்கிய வண்ணதாசனின் ஜன்னல் கதையை ஒட்டிய குறும்படம் வெளியிடப்படும் வண்ணதாசன் வண்ணநிலவன் இருவருக்கும் வாழ்த்துக்கள் சாரல் விருது 2012 அழைப்பிதழ்

முந்தைய கட்டுரைவண்ணதாசனின் சினேகிதிகள்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம்- விமர்சனம்