இரு கடிதங்கள்

அன்பின் ஜெ..

இந்த வாரம் இந்தியா இன்று படித்து எவ்வழியே சிரிப்பது என்றே புரியவில்லை. வழக்கம் போல, ஒவ்வொரு மாநிலத்துக்கும் மதிப்பெண்கள். அவுட்லுக் எவ்வழியோ அதற்கு நேர் மாறான வழி இந்தியா டுடே என்றறிவேன். ஆனால், அவர்களின் நகைச்சுவை உணர்வை இப்போதுதான் உணர்கிறேன்.

1. உத்தராகண்டின் வரிச் சலுகையும், 70% உள்ளூர் மக்களை வேலையில் அமர்த்த வேண்டும் என்ற கொள்கையும், மக்கள் வெளியேறியதைத் தடுத்து,முன்னேற்றங்களை ஏற்படுத்தியதாம். உண்மை: 10% சதம் கூட உள்ளூர் வேலையாட்கள் கிடையாது – எல்லாம் பீஹாரிகள்.. தொழிலதிபர்கள் எல்லாம் இப்போது நிதிஷ் குமாரை திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.. தாயோளி.. பொழப்பக் கெடுத்துருவான் போலிருக்கே..

2. மின்சார உற்பத்தியில் முதலீடு செய்து, தொழில் உற்பத்தியில் மராட்டியம் முன்னிலையில்.. அஜித் பவாரின் சாதனையாம்.. மும்பையில் இருந்து 30 கி,மி தள்ளி, கல்யாணில் 10 மணிநேர மின்வெட்டு..

கம்யூனிஸ்டுகள் சொர்க்கத்தைப் பற்றிய கட்டுரைகளை அவர்களே வெளியிட்டார்கள்.. நம்மவர்கள் அந்த வேலையை அவுட்ஸோர்ஸ் செய்துவிடுகிறார்கள்.. நாலாவது எஸ்டேட்டுக்கு..

தமிழுக்குத் தினமலரின் தனிப்பெரும் பங்களிப்பு, கோ.பி.நி.ச என்னும் சொற்றொடர்..

வாழ்க பாரதம்.

பாலா

திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

எனக்கு அனுப்பப்பட்ட ஒரு சுட்டியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நம்முடைய கல்வி அமைப்பின் குறைபாடுகளைப் பற்றியும், தற்போதைய கல்வி அமைப்புகள் எப்படி முழுதும் வணிகரீதியாக செயல்படுகின்றன என்பதும் உங்கள் வலைப்பக்கங்கள் அதிகம் விவாதித்திருக்கின்றன . பொறுப்பில்லாத ஆசிரியர்கள், அரசியல்மயமாக்கப்பட கல்வி நிறுவனங்கள், இருக்கும் இயற்கையான திறமைகளையும், மழுங்கடிக்கப்பட்டு பட்டதாரி என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு வெளியேற்றப்படும் ஆயிரக்கணக்கான இளைஞர் பட்டாளம் . இவை நாட்டுப்புறங்களில் பரம்பரையாக இருந்துவரும் நுட்பமான திறமைகளையும், வழி வழி வந்த கைவேலைகளையும் , நுண் கலைகளையும் , மரபு வழி வைத்திய முறைகளையும், வரும் தலைமுறைகளுக்கு தெரியாமல் அழிந்துவிடச் செய்கின்றன .

ராஜாஜி அறிமுகப்படுத்திய கல்விமுறை பற்றிய உங்கள் கருத்துக்கள் நம் பாரம்பரியக் கற்பித்தல்களை அடுத்த தலைமுறைக்கு ஓரளவு கொண்டு செல்லக்கூடிய வாய்ப்பை அளிக்கக் கூடியதாக இருந்தது என்பதாக இருந்தது.
இந்தச் சுட்டியின் ‘பங்கர் ராய்’ என்பவரின் கல்வி முயற்சி உண்மையிலேயே ஒரு சிறந்த முன்னுதாரணமாக நான் காண்கிறேன்.

இது பற்றி உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்.

இது போன்ற முயற்சிகள் தமிழ் நாட்டில் எடுக்கப்பட்டால் அதற்கான ஆதரவு எப்படி இருக்கும்? அத்தகைய முயற்சிகள் கொச்சைப்படுத்தப்படும் வாய்ப்புகளைப் பற்றி?

http://www.ted.com/talks/bunker_roy.html?awesm=on.ted.com_9sle

அன்புடன்,
சங்கரநாராயணன்

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைஓராயிரம் கண்கள் கொண்டு