கம்பார்ட்மெண்ட் முழுக்க நிலக்கடலை தொலி கிடக்கும். கூடவே, பனங்கிழங்கு பீலியும், தும்புகளும். இதுவே பண்டிகைகளைப் பொறுத்துக் கரும்புச் சக்கைகள், சம்பா அவல் சிதறல் எனக் கிடக்கலாம்.
டி.டி.ஆர்., வள்ளென்றுதான் விழுவார். அவரைச் சொல்லிக் குற்றமில்லை. நாகர்கோவிலிலோ வள்ளியூரிலோ ஏறின அண்ணாச்சி ‘கண்டக்டர் தம்பி… திர்னெலி எப்பொ வரும்’ எனக் கடுப்பைக் கிளப்பி இருப்பார்.
செல்வேந்திரன் எழுதிய நாகர்கோயில் எக்ஸ்பிரஸ் ஒரு நல்ல பதிவு. இயல்பான நகைச்சுவை.