முற்போக்கு இலக்கிய மரபை பின்பற்றும் நாறும்பூநாதன் திருநெல்வேலியை மையமாக வைத்துப் பல யதார்த்தவாதப் படைப்புகளைத் தந்துள்ளார். நெல்லையின் எளிய மக்களின் அன்றாடவாழக்கையை எழுதுபவர். எழுத்தாளர் உதயசங்கர் இவரது கதைகள் பற்றி , “நாறும்பூநாதனின் பெரும்பாலான கதைகளில் வீடும் குடும்பமும் முக்கியக் களங்களாக அமைந்திருக்கின்றன. பால்யத்தின் நினைவுச் சுவடுகளைப் பின்பற்றி எழுதிப் பார்த்திருக்கிற கதைகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இரா.நாறும்பூநாதன்
