டிசம்பர் மாத கவிதைகள் இதழ் வெளியாகியுள்ளது. இவ்விதழில் ஜெயமோகன் மொழிபெயர்த்த தற்கால மலையாள கவிதைகள் தொகுப்பிலிருந்து கே. சச்சிதானந்தன் கவிதைகள் வெளியாகியுள்ளது.
விக்ரமாதித்யன் கவிதைகள் குறித்து லட்சுமி மணிவண்ணன் எழுதிய ’விக்ரமாதித்யனை வகை செய்வது கடினம்’ என்ற கட்டுரையும், க.நா.சு கட்டுரை தொடரில் ’புதுக் கவிதையின் எல்லைகள்’ என்ற கட்டுரையும் இடம்பெற்றுள்ளன. புதுவை தாமரைகண்ணன் எழுதிய ஆதிமந்தியார் (சங்க கால பெண்பாற் புலவர்) கவிதை பற்றிய குறிப்பும், மயிலாடுதுறை பிரபு ஆதித்ய ஸ்ரீநிவாஸ் கவிதைகள் குறித்து எழுதிய குறிப்பும் இடம் பெற்றுள்ளன.
https://www.kavithaigal.in/
நன்றி,
ஆசிரியர் குழு
(மதார், ஜி.எஸ்.எஸ்.வி. நவின்)