ஜெ. எத்திராஜன் கதை, கவிதை, கதைப் பாடல், புதிர்கள், விடுகதைகள், நாவல்கள் எனச் சிறார்களுக்காகப் பல படைப்புகளைத் தந்தார். குழந்தைகளைச் சிந்திக்க வைப்பதைத் தனது படைப்புகளின் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டார். பேச்சாளராக இருந்த பூவண்ணனை எழுத்தாளராக ஆக ஊக்குவித்தார். ஜெ. எத்திராஜ் மயிலை சிவமுத்து, தங்கமணி, அழ. வள்ளியப்பா ஆகியோரின் வரிசையில் வைத்து மதிப்பிடத்தக்கவர்.
தமிழ் விக்கி ஜெ. எத்திராஜன்