ஜெமோ,
தங்களின் அமெரிக்கப் பயணம் நிறைவாகச் சென்று கொண்டிருப்பதை உணர முடிகிறது. நீங்கள் வாஷிங்டன் பள்ளியில் ஆற்றிய உரையைக் கேட்டேன். Anthill (சிதல்புற்று) பற்றி நீங்கள் விளக்கியது என்னை உங்களுடன் நெருக்கமாக ஆக்கிய ‘தடம்’ தொடர்களுக்கு அழைத்துச் சென்றது. சிதல்புற்று கட்டுரை எப்போதும் ஒரு பேரமைதிக்கு என்னை அழைத்துச் செல்லும். இந்த உரையும் அதையே செய்தது.
சமீபத்தில் படித்த இப்புத்தகமும், அதுபோன்ற ஒரு அமைதியை நோக்கியே என்னை செலுத்தியது. தாகூரின் இக்கட்டுரைகள் பற்றிய என் அவதானிப்புக்களை தங்களுடனும் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
அன்புடன்
முத்து