சி.பா.ஆதித்தனார் மதுரையில் இருந்து மதுரை முரசு என்னும் வாரம் இருமுறை செய்தியிதழை 1942-ல் நடத்தினார். அது தடைசெய்யப்படவே தமிழன் என்னும் இதழை ஆகஸ்ட் 23, 1942-ல் நடத்தினார். அதை நடத்திக்கொண்டிருக்கையிலேயே தினத்தந்தி என்னும் நாளிதழை நடத்த அக்டோபர் 15, 1942-ல் பதிவுசெய்தார். தினத்தந்தி முதலில் தந்தி என்னும் பெயரில் வெளிவந்தது. பின்னர் தினத்தந்தி என பெயர் மாற்றம் பெற்றது
தமிழ் விக்கி தினத்தந்தி