கொங்கு வட்டாரத்தின் வரலாற்றை வெளிக்கொண்டுவந்த முன்னோடி ஆய்வாளர்களில் ஒருவர் தி.அ.முத்துசாமிக் கோனார். திருச்செங்கோடு மலையில் படி வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். பின்னர் மேஸ்திரியாக உயர்ந்தார். இறுதியில் கல்பொடி பட்டமையால் கண்பார்வை இழந்து வாழ்ந்து மறைந்தார்.
முத்துசாமிக் கோனார் பெரும்பாலும் கொங்குவட்டாரத்து பிரமுகர்களின் ஆதரவையோ ஆய்வாளர்களின் உதவியையோ பெறவில்லை. அவர் சேகரித்து வைத்திருந்த ஏராளமான சுவடிகளும் அவருடைய குறிப்புகளும் அவர் மறைந்ததும் கூடவே அழிந்தன. கொங்குவட்டார வரலாற்றுக்கு அது பேரிழப்பு மட்டுமல்ல கொங்குவட்டாரச் செல்வந்தர்களின் வரலாற்றில் பெரும் இழுக்கும்கூட.
தி.அ.முத்துசாமிக் கோனார்
