சக்தியும் செனெட்டும்

நண்பர் சக்தி கிருஷ்ணன் நெல்லைக்காரர். எங்கள் பயணத்துணைவர், தீவிர இலக்கிய வாசகர். சட்டத்தில் முதுகலை, முனைவர் பட்டம் பெற்றவர். நகைவணிகம், வழக்கறிஞர் தொழில் செய்தபடியே கல்வித்துறையில் ஈடுபட்டு வென்றவர். கிட்டத்தட்ட மூடும் நிலையில் இருந்த தஞ்சை விவேகானந்தா கல்லூரியை மீட்டு அதை குறிப்பிடத்தக்க கல்விநிலையமாக ஆக்கியவர். இப்போது திருவண்ணாமலையின் அடையாளங்களில் ஒன்றான எஸ்.கே.பி பொறியியல் கல்லூரியை சர்வதேசத்தரத்தில் விரிவாக்கம் செய்து அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்லும் பெருங்கனவுடன் நிர்வாகப்பொறுப்பேற்று  செயல்பட்டுவருகிறார். அவருக்கு பாரதிதாசன் பல்கலையில் செனெட் குழு உறுப்பினர் பதவி அமைந்துள்ளது. வாழ்த்துக்கள்.

முந்தைய கட்டுரைமனைவியின் கடிதம்
அடுத்த கட்டுரைமென்மலர் -கடிதம்