கோவை சொல்முகம் வாசகர் குழுமம் ஒருங்கிணைக்கும் 26வது வெண்முரசு கூடுகை வரும் ஞாயிறு அன்று கோவையில் நிகழவுள்ளது.
முதல் அமர்வில், வெண்முரசு நூல் வரிசையின் எட்டாவது படைப்பான “காண்டீபம்” நாவலின் பின்வரும் அத்தியாயங்களை முன்வைத்து கலந்துரையாட உள்ளோம்.
பேசுபகுதி:
பகுதி 5 – தேரோட்டி – அத்தியாயம் 1 முதல் 15 வரை
இரண்டாவது அமர்வில், தாராசங்கர் பந்த்யோபாத்யாயா அவர்களின் ‘ஆரோக்கிய நிகேதனம்’ நாவல் மீது கலந்துரையாடல் நிகழும்.
ஆர்வமுள்ள இலக்கிய வாசகர்கள் அனைவரையும் இதில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
நாள் : 26-03-23, ஞாயிற்றுக்கிழமை.
நேரம் : காலை 10:00
இடம் : விஷ்ணுபுரம் பதிப்பகம், வடவள்ளி, கோவை.
Google map : https://maps.app.goo.gl/rEKLkhumw9r6XPGV9
தொடர்பிற்கு :
பூபதி துரைசாமி – 98652 57233
நரேன் – 73390 55954