தியடோர் பாஸ்கரன் மலர், கடிதங்கள்

குருகு தியடோர் பாஸ்கரன் மலர்

அன்புள்ள ஜெ,

தியடோர் பாஸ்கரன் மலர் ஒரு முக்கியமான முயற்சி. தமிழில் அவர் ஒரு முன்னோடி. தமிழில் சுற்றுச்சூழல் பற்றி பலர் முன்பு எழுதியிருந்தாலும் சீராக கலைச்சொற்களுடன் அதை ஓர் அறிவியல் போல எழுதியவர் தியடோர் பாஸ்கரன் அவர்கள்தான். சினிமா ஆய்வுக்கும் அவருடைய பங்களிப்பு முக்கியமானதுதான். ஆனால் அதை இன்று பல்வேறு பல்கலைகழகங்களே செய்கின்றன. சுற்றுச்சூழல் தான் தமிழகத்திற்கு தேவையான ஞானம். தமிழகம் பேசியாகவேண்டிய விஷயம். அதை அற்புதமாக முன்வைத்தவர் தியடோர் பாஸ்கரன் அவர்கள். அவருக்கு ஓர் இணைய இதழ் மலர் வெளியிட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது.

ராஜ்குமார் அர்விந்த்

***

அன்புள்ள ஜெ

குருகு இணைய இதழில் தியடோர் பாஸ்கரன் மலரில் முக்கியமாக சொல்லவேண்டியவை அவருடைய பேட்டியும் லோகமாதேவி அவர்களின் கட்டுரையும். சிறந்த வெளியீடு.

இதேபோல தமிழுக்கு அறிவுப்பங்களிப்பு செய்த பி.ல்எ.சாமி, பிலோ இருதயநாத், தொ.மு.பாஸ்கரத்தொண்டைமான் ஆகியோர் பற்றியும் நல்ல மலர்கள் வெளியிட்டு கௌரவிக்கப்படவேண்டும். அவர்களை தமிழ் இளைய சமூகம் மறந்துவருகிறது.

குமார் முருகேஷ்

முந்தைய கட்டுரைகோவை சொல்முகம் உரையாடல்- 26
அடுத்த கட்டுரைமதங்களின் ஆழமும்; அறிவியலின் எல்லையும்- கடலூர் சீனு