தியான வகுப்பு- அறிவிப்பு

இரண்டுவகை தியானப் பயிற்சிகள் உள்ளன. மெய்மையை அறிந்து அதுவாக ஆதலின் பொருட்டு செய்யப்படுபவை. அவையே சாதகம் எனப்படுகின்றன. இன்னொன்று, இந்த அன்றாட உலகியலில் தன்னைத் தானே தொகுத்துக் கொள்ளும்பொருட்டு செய்யப்படும் தியானங்கள். ஒப்புநோக்க எளியவை. சென்ற காலத்தின் தியான மரபுகளில் இருந்து இன்றைய காலகட்டத்திற்காக எடுத்துத் தொகுக்கப்பட்டவை.

அத்தகைய தியானப் பயிற்சியின் தேவை ஒன்று உள்ளது என பல நண்பர்கள் சொன்னார்கள். ஆகவே நண்பர் தில்லை செந்தில் பிரபு அவர்களைக் கொண்டு தியான முகாம் ஒன்றை ஒருங்கமைக்கலாமென்று எண்ணினேன். நவீன மனிதனுக்கான தியானம் இது. மனித வழிபாடுகள், மாயங்கள் போன்றவை இல்லாமல் புறவயமான தர்க்க அடிப்படை கொண்டது. பெருந்திரளாக அன்றி குறைந்த எண்ணிக்கையிலான சிலருக்காக அளிக்கப்படும் தனிப்பட்ட பயிற்சி

தில்லை செந்தில் பிரபு பல முக்கியமான தியான மையங்களில் இருபதாண்டுகளுக்கும் மேலாகப் பயிற்சி பெற்றவர். Ananda Chaitanya Foundation என்னும் தியான அமைப்பை நடத்தி வருபவர். கல்விப்பணிகள், ஆளுமைப் பயிற்சிப்பணிகளை ஒருங்கிணைக்கிறார்.

வரும் மார்ச் 17, 18 19 (வெள்ளி சனி ஞாயிறு) நாட்களில் ஈரோடு அருகே நிகழும் தியான முகாமில் இக்கல்வி கற்றுத்தரப்படும். ஆர்வமுள்ளவர்கள் கீழுள்ள மின்னஞ்சலுக்கு தங்கள் பெயர் மற்றும் தகவல்களுடன் விண்ணப்பிக்கலாம்

[email protected] 

முந்தைய கட்டுரைஎழுகதிர்நிலம், கடிதங்கள்
அடுத்த கட்டுரைகேரள இலக்கியவிழா உரையாடல்