அன்புள்ள ஜெ,
நாமக்கல் உரையான விடுதலை என்பது என்ன காணொளி பார்த்தேன், எனக்கு மிக பயனளித்தது, இந்து ஞான தத்துவங்கள் சார்ந்த ஆரம்ப கட்ட புரிதல்கள் கொடுத்தது, இந்து ஞான மரபின் ஆறு தரிசனங்கள் நூல் படித்து வருகிறேன், இது இல்லாமல் விவேகானந்தர், சித்பவானந்தர் நூல்களும் சேர்த்து வாசித்து வருகிறேன், ஒரு நோக்கம் இருக்கிறது, அதற்காக இவைகளை வாசிக்கிறேன்.
விடுதலை உரை கேட்டபோது எனக்கு வைஷேசியமும், நியாயமும் இப்போது அவசியம் தேவையானது என்று தோன்றியது, எனக்கு என் தேவைகள் நோக்கங்கள் சார்ந்த தெளிவு இன்னும் சரியாக இல்லை, குழப்பங்கள் இருக்கிறது, என்னை வடிவமைக்க, எது என் தேவை, எது என் பிரச்னை, அதற்கு என்ன தீர்வு என்பதை உணர்ந்தாலே, இந்த அறியாமையை நீக்கினாலே அதை உணர்ந்து சரியாக செல்வேன் என்று உணர்கிறேன், உண்மையில் இப்படி யோசித்த சில நாட்களிலேயே, அதற்காக தீர்வை உணர்ந்து அதை நோக்கி நகரும் சில நாட்களிலேயே தெளிவுகளையும், தீர்வுக்கான சாத்தியங்களையும் உணர்கிறேன், அதற்கான சில அடிகள் நகர்ந்தும் இருக்கிறேன்.
ராதாகிருஷ்ணன்