காந்தி எனும் உரையாடல் -கடிதம்

உரையாடும் காந்தி வாங்க

உரையாடும் காந்தி மின்னூல் வாங்க

அன்பிற்குரிய திரு ஜெயமோகன்,

இன்றைய தினம் உங்களின் விவாத நூலான “உரையாடும் காந்தி” படித்து முடித்தேன். “இன்றைய காந்தி” வாசிப்பிற்கு இந்த என் சிந்தனையை விரிவு படுத்தும் நூலை படித்து அதீத உவகை கொண்டேன். மிக துல்லியமாக, வாசகர்களின் கேள்விகளுக்கு மிகுந்த பொறுமையுடன், நாகரீகமான முறையில் நீங்கள் கூறியிருக்கும் பதில்கள் அனைவரும் இன்றைய அரசியல் சூழலில் அறிந்து கொண்டு, வரும் தலைமுறையினர் நல்ல சமூகமாக மாற உதவ வேண்டும் என்று எண்ணுகிறேன்.

வாசகர்கள் தேடி தேடி காந்தி பற்றி அறிய வேண்டிய அரிய தகவல்களையெல்லாம், நீங்கள் உங்கள் நேரத்தை உகந்த வகையில் பயன்படுத்தி படித்து சமூகத்திற்கு விவாதங்கள் வழியாக சொல்லியிருக்கும் முயற்சி மிகுந்த பாராட்டுதலுக்குரியது. இந்த நூலின் மூலம் தாங்கள் குறிப்பிட்டிருந்த பல ஆளுமைகளை பற்றி மேலும் அறிய விழைகிறேன். அதீத வியப்புடனும், உவகையுடன் படித்த பகுதி – இந்துத்துவம், காந்தி மற்றும் காந்தியின் சிலுவை.

இந்த நூலை படித்த பிறகு, உண்மை வரலாற்றை அறிய விழைகிறேன். மீண்டும் மகாத்மா காந்தி பற்றிய உங்களின் விவாதங்கள் அடங்கிய நூலை படிக்க அதீத உவகையுடன் இருக்கிறேன். சத்திய சோதனை வாங்கியிருக்கிறேன். வாசித்து, காந்தியின் கொள்கைகளை, கருத்துக்களை புரிந்து கொள்ள வேண்டும்.

உங்களின் காடு, கொற்றவை, வெள்ளையானை, விஷ்ணுபுரம், இன்றைய காந்தி, பின் தொடரும் நிழலின் குரல், கதாநாயகி, குமரித்துறைவி, ரப்பர், கன்னியாகுமாரி படித்து முடித்து விட்டு இப்போது அனல் காற்று படித்துக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு படைப்பும் தனிச்சிறப்பு கொண்டது.

உங்களின் அடுத்த படைப்பை, உவகையுடன் எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்

பழனியப்பன் முத்துக்குமார்.

***

அன்புள்ள முத்துக்குமார்,

உரையாடும் காந்தி நூல் உங்களுக்கு நிறைவளித்தமை மகிழ்ச்சியளிக்கிறது. காந்தியை ஓர் உரையாடல் மையமாகவே வைத்திருக்கவேண்டும், அவரை அடையாளமாக ஆக்கிவிடலாகாது என்பதே என் என்றுமுள்ள எண்ணம். நான் அவரை உரையாடல்கள் வழியாகவே கண்டடைந்தேன். நான் சந்தித்த மாபெரும் காந்தியக் களச்செயல்பாட்டாளர்களை நினைவுகூர்கிறேன்

ஜெ

முந்தைய கட்டுரைவிடுதலை, திரையரங்கில்…
அடுத்த கட்டுரைபொய்க்குற்றச்சாட்டுகள், பெண்கள் -கடிதம்