எழுகதிர்நிலம்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

எழுகதிர் நிலம்,பட்டென்று முடிந்து விட்டது போல உணர்வு. ஆனால் -” எவ்வளவு பெரிது இந்நிலம். இங்கே எவரேனும் வாழ்ந்து நிறைய முடியுமா என்ன?” …. அதற்கு பதிலளித்தது போல முடிந்தது.

“பயணங்கள் போதும்” என்ற எண்ணம் நமக்கு வரவே வராதா ஆசானே?

உங்கள் பயண அளவில் 10000ல் ஒரு பங்காவது சுற்றியிருப்பேன். சென்றுள்ள பயணம் முடிந்து திரும்பும் போது மாபெரும் அடுத்த பயணம் கிளைக்கும் தருணம் உங்களுக்கும் உண்டென தெரியவருகிறது பயணக் கட்டுரையின் போக்கில்… உங்களோடு சேர்ந்து செல்ல இப்பிறவியில் வாய்ப்பு இல்லை என்று முடிவு செய்து உங்கள் பயணக்கட்டுரைகளை அச்சாக்கி அள்ளிக் கொண்டு கிளம்பி விடுவேன். ருகர்கள் பாதை…. ஒரு கனாக்காலம்.

இந்த கடனையெல்லாம் எப்படி அடைப்பது என்று தெரியாமல் ….

அலகிலா நன்றிகளுடன்

சு.செல்வக்குமார்

மதுரை.

குறிப்பு:

தவாங் , அதற்கு மேலே ஜமீதாங் வரை ஏற்கனவே சென்றிருந்ததால் கட்டுரை மூலம் உங்களுடனே பயணித்த உணர்வு. … 2015ல். அதுவும் ஜனவரியில்.

அன்புள்ள ஜெ

எழுகதிர்நிலம் அபாரமான ஒரு பயணத்தொடர். அதன் கவித்துவமும் நகைச்சுவையும் நுண்தகவல்களும் அதை ஓர் அற்புதமான வாசிப்பனுபவமாக ஆக்குகின்றன. அந்தமாதிரி ஒரு நிலம் ஐரோப்பாவில்தான் இருக்கமுடியுமென நினைத்திருந்தேன். பனிநிலத்தில் நீங்கள் சென்றதும் சரி, உறைந்த பனியேரிகளும் சரி ஒரு கனவுபோலிருந்தன. குறிப்பாக பனியருவிக்குக் கீழே நிற்கும் காட்சி ஒரு கிளாஸிக் ஓவியம்போலிருந்தது.

ராஜேந்திரன் ம

எழுகதிர் நிலம்- 9

எழுகதிர் நிலம்- 8

எழுகதிர் நிலம்-7

எழுகதிர்நிலம்- 6

எழுகதிர் நிலம் 5

எழுகதிர் நிலம்- 4

எழுகதிர் நிலம்- 3

எழுகதிர் நிலம் -2

எழுகதிர்நிலம்-1

முந்தைய கட்டுரைநற்றுணை கலந்துரையாடல், கடிதம்
அடுத்த கட்டுரைஒரு கிறிஸ்தவ சபை, நூல்கள்