தத்துவ வகுப்புகள், கடிதங்கள்

ஹலோ சார்

2023 ஆண்டு துவக்கதில் உங்களுடைய இந்திய தத்துவ அறிமுக வகுப்பில் கலந்து கொண்டது எனக்கு ஒரு மிக நல்ல தொடக்கம்.

இந்த ஆரம்ப வகுப்பில் இந்திய தத்துவத்தை பற்றி ஒரு துல்லியமான வரைபடத்தை எங்களுக்கு அளித்தீர்கள். மிக சிரத்தையாக வடிவமைக்கப்பட்ட மூன்று நாட்களின் விரிவுரைகள், நிச்சயமாக எங்கள் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டவை.

மூன்று நாட்களிலே இந்திய தத்துவ சிந்தனை மரபின் சாரம்சத்தையும், அதன் பல்வேறு தரிசன வகைகளையும், ஒவ்வொன்றின் தனித்தன்மைகளையும், ஒட்டுமொத்த சிந்தனைகளின் அடுக்கு முறைகளயும், தத்துவ ஞானிகளையும், சரியான விளக்கங்களுடன் சிந்தனை மரபின் கலைச்சொற்கள் தொகுப்பும், மற்றும் சிந்தனை மரபின் ஒட்டு மொத வரலாற்று பற்றிய சித்திரத்தையும் எங்களுக்கு அளித்தீர்கள். இது நான் கலந்து கொண்டு மிக அதிகமாக கற்றுக்கொண்ட பயன்பெற்ற சிறந்த நிகழ்ச்சிகளில் ஒன்றாகும். மிக்க நன்றி.

Bonus ஆக நடை பயணங்களில் பாரதியாரின் கடைசி காலம் பற்றிய ஒரு துல்லிய சித்திரத்தை அளித்தீர்கள். இது அவரை பற்றிய பல சிறந்த புத்தகங்ளை படித்த அனுபவத்தை கொடுத்தது.

உங்களுடன் இருந்த ஒவ்வொரு நிமிடமும் ஒரு கற்றலாக இருந்தது.

இந்த தொடரின் அடுத்த கட்ட வகுப்பை ஆவலுடன் எதிர்பார்க்கும்,

அன்புள்ள

ஆனந்த் கிருஷ்ணன்

திருப்பூர்

***

அன்புள்ள ஜெ

தத்துவ அறிமுக வகுப்புகள் பற்றிய செய்திகளை வாசித்தேன். தத்துவத்தை முறையான வகுப்புகள் வழியாக மட்டுமே அறிமுகம் செய்துகொள்ள முடியும் என்பதுதான் உலகமெங்குமுள்ள நடைமுறை. அமெரிக்காவில் மேலைத்தத்துவத்தை 15 நாள் வகுப்புகள் வழியாக முறையாகக் கற்பதற்கான பல அமைப்புகளை பல்கலைக் கழகங்களிலேயே காணலாம். தத்துவ வகுப்பின் முக்கியமான பயன் என்னவென்றால் தொடக்கத்திலேயே நாம் தவறாக ஏதேனும் புரிந்துகொண்டிருந்தால் அதை களைய முடியும். நூல்களை நம்பியே வாசித்தால் கொஞ்சநாட்களில் ஒரு தப்பான புரிதலை மிகப்பெரியதாக வளர்த்துவிட்டிருப்போம். பிறகு சரியாக புரிந்துகொள்ளவும் முடியாது. இந்தியாவில் இந்தவகை முறைகள் இல்லை. தமிழகத்தில் நான் கேள்விப்பட்டதில்லை. தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பு.

அர்விந்த் ஆறுமுகம்

முந்தைய கட்டுரைஅறம் ஒரு பதிவு
அடுத்த கட்டுரைஜார்ச் சாண்ட்,தஸ்தயேவ்ஸ்கி- கடிதம்