அம்புப்படுக்கை- கடிதம்

அம்புப்படுக்கை வாங்க
சுனில் கிருஷ்ணன் விக்கி
சுனில் கிருஷ்ணனின் ‘அம்புப் படுக்கை’

சுனீல் கிருஷ்ணனின் “அம்புப் படுக்கை” சிறுகதைத் தொகுப்பில் இறுதிக்கதையான “ஆரோகணம்” பற்றி..

ஆரோகணம்: இந்தக் கதைக்கு இதைவிடவும் சரியான தலைப்பு இருக்கமுடியாது. அந்தக் கடைசி கணத்தில் கூட – அது இர09ண்டா மூன்றா என்பது கூடத் தெளிவில்லாத நிலையில் கூட – சுய பரிசோதனை வேள்வித் தீ நாக்குகளைச் சுழற்றியபடி தொடர்ந்து எழுகிறது. ஒரு பார்வையில் வாழ்வின் அவரோகணமாக இருந்தாலும் மற்றொரு பார்வையில் அது உச்சத்துக்கு இட்டுச்செல்லும் ஆரோகணமே. அந்தக் கிழவருக்கே அவர் இதுகாறும் வாழ்ந்த வாழ்வை எங்கும் வெள்ளி போல பனி விழுந்துள்ள, திசைகள் கரைந்துபோய்விட்ட அந்த பனிப்பாலைவனத்தின் வெறுமை பிரதிபலித்தால் மற்ற சாமானியர்களின் வாழ்வை எது எப்படிப் பிரதிபலிக்கும் என்பது ஒரு பெருங்கேள்வி. ஒரு பனிப்பாலையோ, மணற்பாலையோ, அடர்ந்த காடோ, ஒரு முடிவற்ற உப்பளமோ எதுவாகவோ இருக்கலாம். ஆனால் அந்தப் பயணத்தினூடே தன் வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்குவது அனைவராலும் முடியுமா என்பது முயலுக்குக் கொம்பு முளைத்தாற்போலத்தான். கூடவே வரும் அந்த சுவானம் அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கும் காலத்திற்கு அப்பாற்பட்ட ஒரு கணத்தில் நடைபெறும் சுய பரிசோதனைக்குமான சாட்சி. அதற்குப் பாலையும் ஒன்றுதான் பசுவயலும் ஒன்றுதான்.

இப்படி ஒரு காட்சியை கற்பனை செய்து ஒரு சிறுகதையாய் வடிப்பது பாராட்டவேண்டிய ஒரு முயற்சி. படித்தபின்னர் மிகுந்த அசௌகரியத்தை உருவாகும் ஒரு கதை. அனைத்திற்கும் பிறகு கிழவர் எடுக்கும் ஒரு தேர்வின் விளைவாக அவர் காண்பதெல்லாம் தன்னைத்தான் என்பது பென்னப்பெருங் கற்பனை. ஒரு உடோபியக் கற்பனையின் உச்சம். காந்தியம் என்ற ஒரு abstractஐயும் தாண்டிய ஒன்று.

மஹேஷ், சிங்கப்பூர்

***

முந்தைய கட்டுரைநடிகையின் நாடகம்
அடுத்த கட்டுரைசண்முக செல்வகணபதி