கோவை சொல்முகம் கூடுகை 24

நண்பர்களுக்கு வணக்கம்.

கோவை சொல்முகம் வாசகர் குழுமம் ஒருங்கிணைக்கும் 24வது வெண்முரசு கூடுகை வரும் ஞாயிறு அன்று கோவையில் நிகழவுள்ளது.

முதல் அமர்வில், வெண்முரசு நூல் வரிசையின் எட்டாவது படைப்பான “காண்டீபம்” நாவலின் முதல் இரண்டு பகுதிகளை முன்வைத்து கலந்துரையாட உள்ளோம்.

பகுதிகள்:

1. கனவுத்திரை

2. அலையுலகு

இரண்டாவது அமர்வில், ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி அவர்களின் ‘கரமசோவ் சகோதரர்கள்’ – 1 (புத்தகம் 6 வரை உள்ள பாகங்கள்) நாவல் மீது கலந்துரையாடல் நிகழும்.

ஆர்வமுள்ள இலக்கிய வாசகர்கள் அனைவரையும் இதில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

நாள் : 29-01-23, ஞாயிற்றுக்கிழமை.

நேரம் : காலை 10:00

இடம் : விஷ்ணுபுரம் பதிப்பகம், வடவள்ளி, கோவை.

Google map :

https://maps.app.goo.gl/rEKLkhumw9r6XPGV9

தொடர்பிற்கு : பூபதி துரைசாமி – 98652 57233 நரேன் – 73390 55954

முந்தைய கட்டுரைபோருக்குப் பின் – பெண் புலிகள் நிலை என்ன?-கருணாகரன்
அடுத்த கட்டுரைவ.த.சுப்ரமணிய பிள்ளை, திருப்புகழ் – கடிதம்