கிருஷ்ணன் நம்பி

கிருஷ்ணன்நம்பி தமிழின் சிறந்த சிறுகதைகளில் சிலவற்றை எழுதியிருக்கிறார். தமிழின் முதல் மாயயதார்த்தக் கதை (ஆனால் மாய யதார்த்தம் லத்தீனமேரிக்காவில் தோன்றுவதற்கு முன்னரே எழுதப்பட்டுவிட்டது) எனச் சொல்லத்தக்க தங்க ஒரு என்னும் சிறுகதையின் ஆசிரியர்.

1996 வாக்கில் ஓர் அம்மையார் கிருஷ்ணன் நம்பி படைப்புகளில் முனைவர் பட்ட ஆய்வு செய்வதாகச் சொன்னார். குறிப்பாக என்ன காரணம் என நான் கேட்டேன். “மொத்தமே இருநூறு பேஜ்தான் சார் கிருஷ்ணன்நம்பியோட படைப்புலகம். நமக்கு பிள்ளையளை வைச்சுக்கிட்டு படிக்க நேரமில்லை” என்றார். அவர் இன்று பேராசிரியராக ஆகியிருப்பார் என நினைக்கிறேன்

கிருஷ்ணன் நம்பி

கிருஷ்ணன் நம்பி
கிருஷ்ணன் நம்பி – தமிழ் விக்கி

முந்தைய கட்டுரைதி.சா.ராஜூ,கடிதம்
அடுத்த கட்டுரைஏழாம் உலகம் ஆங்கிலத்தில்