செல்லவேண்டிய ஆறு

வழக்கமாக புத்தாண்டில் எங்காவது கூடுவது வழக்கம், இவ்வாண்டு அது இயலவில்லை. பல நண்பர்கள் கூடும்நிலையில் இல்லை. அடுத்த ஆண்டுமுதல் அதை ஒரு பொதுநிகழ்வாக, முறையாக அறிவிப்பு விட்டு நிகழ்த்துவதாக திட்டம் உள்ளது.

கிருஷ்ணனும் நண்பர்களும் மட்டும் கூடினர். நள்ளிரவில் 12 மணிக்கு நான் வழக்கமாக ஓர் 7 நிமிட உரை ஆற்றுவதுண்டு. அதை ஆற்றும்படி மின்னஞ்சலில் கோரினர். நான் பேசினேன்.

அந்த உரையின் சுருக்கம் இதுவே. ஒவ்வொரு ஆண்டு நிறைவிலும் வருமாண்டில் என்னென்ன செய்யவேண்டும் என பட்டியலிடுபவர்கள் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை. என்ன செய்தோம் என்று சொல்பவர்களே முக்கியமானவர்கள். அவர்களையே நான் என்னுடன் அடையாளப்படுத்திக் கொள்கிறேன்.

ஓர் ஆண்டில் ‘சாதித்தவை’ முக்கியமானவை அல்ல. அப்படி ஒரு சாதனை என்பது இல்லை. ஓர் ஆண்டை மகிழ்ச்சியாகக் கழித்தோமா என்பதே முக்கியமானது. மகிழ்ச்சியாகக் கழித்தாலே நாம் உரியவை சிலவற்றைச் செய்துள்ளோம், சாதித்துள்ளோம் என்றுதான் பொருள்.

இந்த ஆண்டில் நான் இலக்கியக் களத்தில் தொடர்ந்து செயல்படுபவர்கள் என நினைக்கும் இருவரின் பதிவுகள்

2022: வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்

நினைவுப்பாதை – சுனில் கிருஷ்ணன்

முந்தைய கட்டுரைநீலமென்பவன்
அடுத்த கட்டுரையோகம்: நல்லூழ் விளைவு