விஷ்ணுபுரம் விருந்தினர் – கடிதம்

அன்புள்ள ஜெ

விஷ்ணுபுரம் விருந்தினர்களின் பட்டியலைப் பார்த்தேன். அதிலுள்ள கலவைத்தன்மை எனக்குப் பிடித்திருந்தது. இடதுசாரிகள், நவீனத்துவர்கள், பதிப்பாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள்… இன்று தமிழிலக்கிய இயக்கத்தின் எல்லா முகங்களும் சரியாக அமைந்திருந்தன. விஷ்ணுபுரம் இலக்கியவிருதின் முக்கியமான அம்சமே இந்த விஷயம்தான். ஒருவரை அழைத்து விருது கொடுப்பது முக்கியமல்ல. இப்படி பல எழுத்தாளர்கள்கூடிய சபை சாரு நிவேதிதாவுக்கு விருது அளிக்கும்போதுதான் அது உண்மையில் விருதாக ஆகிறது. ஊர்கூடி தேர் இழுக்கவேண்டும். ஊரே கூடி இழுத்தால்தான் அது தேர்.

எஸ்.ராஜமாணிக்கம்

*

அன்புள்ள ஜெ

விஷ்ணுபுரம் விருந்தினர்களின் பட்டியல் நிறைவளித்தது. ஒவ்வொரு ஆண்டும் இளம் எழுத்தாளர்களை முன்னிலைப்படுத்தி அவர்கள்மேல் வாசகர்களின் வெளிச்சம் விழச்செய்கிறீர்கள். அதற்காக அவர்களை வாசிக்கச் செய்கிறீர்கள். இது சாருவுக்கான விருது மட்டும் அல்ல, ஒருவகையில் இந்த விருந்தினர் அனைவருக்குமே விருது அளிக்கப்படுகிறது என்று நினைக்கிறேன்.

ஜெயக்குமார் ஆனந்த்

————————————————————————

விஷ்ணுபுரம் விருந்தினர்-1: அ.வெண்ணிலா

விஷ்ணுபுரம் விருந்தினர்-2. கார்த்திக் புகழேந்தி  

விஷ்ணுபுரம் விருந்தினர் 3- அகரமுதல்வன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-4- கார்த்திக் பாலசுப்ரமணியன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-6,  கமலதேவி 

விஷ்ணுபுரம் விருந்தினர்- 6,விஜயா வேலாயுதம் 

 

விஷ்ணுபுரம் விருந்தினர் 7, குளச்சல் மு.யூசுப்

விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்.போகன் சங்கர் 

முந்தைய கட்டுரைஜெயமோகனும் பெண்ணியமும், கடிதம்
அடுத்த கட்டுரைபுரூனோ மன்சர், இன்னொரு மகாத்மா