ஒவைசி, கடிதம்

ஓரு நல்நிகழ்வு- ராஜு

அன்புள்ள ஜெ

ஒரு நல்நிகழ்வு என்னும் கட்டுரை துணுக்குறச் செய்தது. அக்கட்டுரை எம்.ஐ.எம் போன்ற ஒரு தீவிரப்போக்கு கொண்ட மதவாதக் கட்சியை ஆதரித்து எழுதப்பட்டுள்ளது. அஸருதீன் ஒவைசி போன்ற ஒருவரை ஆதரிப்பதென்றால் அதற்கு என்ன அர்த்தம் என்றே புரியவில்லை.

எஸ்.ராமன்

*

அன்புள்ள ராமன்,

அக்கட்டுரையை எழுதியவர் தெலுங்கானாவில் வாழ்பவர், அங்கே நாளிதழில் அரசியல் நோக்கராக பணிபுரிபவர், காந்தியப்பார்வை கொண்டவர், அரசியல்வாதி அல்ல. ஆகவே அக்கருத்து வெளியிடப்பட்டது.

நான் அக்கட்டுரையின் உள்ளடக்கத்தை தனிப்பட்ட முறையிலும் ஏற்கிறேன். இந்தியாவில் சாதி- மதக் கட்சிகள் உருவாவதை தடுக்க முடியாது. அவை தேவையில்லை என நினைக்கிறேன், ஆனால் அவை உருவாகிக்கொண்டே உள்ளன. அவை ஜனநாயக – தேசியப்பாதையை தேர்வு செய்கின்றன என்றால் அது வரவேற்கப்படவேண்டிய விஷயம்தான்.

ஒவைசியைப் பொறுத்தவரை அவர் வன்முறையை, பிரிவினையை ஆதரித்து எதையும் பேசியதாக நான் காணவுமில்லை.

ஜெ

*

முந்தைய கட்டுரைதெய்வங்களின் கதைகள்
அடுத்த கட்டுரைகாந்தியைக் கண்டடைதல் -கடிதங்கள்