குமரித்துறைவி, கடிதங்கள்

குமரித்துறைவி வாங்க

அன்புள்ள ஜெ

குமரித்துறைவி குறுநாவலை ஒரே மூச்சில் வாசித்துவிட்டு இதை எழுதுகிறேன். அற்புதமான ஒரு அனுபவம். அதை என்னால் சொல்லிவிட முடியாது. ஒரு தெய்வீகக் கல்யாணம். கல்யாணமே தெய்விகமானதுதான். ஏனென்றால் அதிலே சம்பந்தமில்லாத இருவர் விதியால் இணைக்கப்படுகிறார்கள். இது விதியை ஆட்சிசெய்யும் சக்தியும் சிவமும் செய்துகொள்ளும் திருமணம். சிவசக்தி லயம் இது. அவ்வளவு அழகான கதை. அதற்குமேல் சொல்லத்தெரியவில்லை.

எம். திருமகள்

*

அன்புள்ள ஜெ

குமரித்துறைவி நாவல் என் வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே ஆகிவிட்டது. எனக்குத்தெரிந்த அனைவரிடமும் அதைப்பற்றிச் சொல்கிறேன். விலைகொடுத்து வாங்கி தேவைப்படுபவர்களுக்குக் கொடுங்கள் என்று சொல்கிறேன். பரிசாகக்கொடுக்க தமிழிலேயே நல்ல புத்தகம் சங்கசித்திரங்கள்தான் என்று சொல்லிவந்தேன். இப்போது இந்நூலைச் சொல்வேன். இது ஒரு அற்புதமான கதை மட்டுமல்ல. நம் பண்பாட்டின் சித்திரமும்கூட

ஜானகி கிருஷ்ணன்

முந்தைய கட்டுரைபௌத்தம் புத்துயிர் கொள்ளுதல்-2
அடுத்த கட்டுரைகவிதைகள் நவம்பர் இதழ்