ஒரிசா, பெண்களின் பயணம். ஓர் அறிவிப்பு

சிலிகா ஏரி

இனிய ஜெ,

இந்தியப் பயணம், குகைகளின் வழியே, சமணர்களின் பாதை, கதிரவனின் தேர் ஆகிய நூல்கள் அளித்த ஊக்கத்தில் மகளிர் மட்டும் செல்லும் ஓர் ஒரிஸா பயணத்திற்குத் திட்டமிட்டுள்ளோம்.

5 பெண்கள் அடங்கிய குழு நவம்பர் 11ஆம் தேதி சென்னையிலிருந்து கிளம்பி 10 நாட்கள் கீழ்க்காணும் இடங்களுக்குச் செல்கிறோம்.

புவனேஷ்வர், பூரி, கட்டாக், கொனார்க்கில் உள்ள ஆலயங்கள் மற்றும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குச் செல்வது திட்டம். சென்னையிலிருந்து புவனேஸ்வர் வரை விமானம், பிறகு அங்கிருந்து காரில் இடங்களைச் சென்று பார்க்க இருக்கிறோம்.

தற்போது செல்வராணி, திருக்குறள் அரசி, ஜோசஃபின் ஆகியோர் பயணத்துக்குத் தயாராக  இருக்கிறோம்.  இன்னும் இரண்டு பெண்களுக்கு இடம் இருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் எங்களை 9080562289 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மிக்க அன்புடன்,

திருக்குறள் அரசி

***

முந்தைய கட்டுரைஇந்து மதம், இந்திய தேசியம்
அடுத்த கட்டுரைஆதித்த கரிகாலன் கொலை வழக்கு ‍ நாவல் வெளியீட்டு விழா