சில கதைகளை வாசித்தபின் நீண்டகாலம் கழித்து மீண்டும் வாசிக்கவேண்டும் என்னும் எண்ணம் உருவாகும். அந்த வாசிப்பு ஒருவகையான ஏக்கத்தை அளிப்பது. அந்த முதல் தித்திப்பு மீண்டும் இருக்காதா என்னும் எண்ணம் வரும். அத்தகைய கதைகள் அடங்கிய தொகுப்பு பொலிவதும் கலைவதும். அந்தக் கதையே அந்தவகையான மனநிலைகளை உருவாக்கக்கூடியது. எல்லா கதைகளுமே ஆண்பெண் உறவின் நுணுக்கமான விஷயங்களைப் பேசுபவை. பல கதைகளை ஒருவகையான melancholy மனநிலையில் வாசித்தேன். சிறப்பு.
அருண்குமார்
*
அன்புள்ள ஜெ
பொலிவதும் கலைவதும் கதையை வாசிக்கையில் தெரியவில்லை. ஆனால் சென்ற பல நாட்களாகவே அதன் தலைப்பு நாவில் ஒரு இனிப்பு போல இருந்துகொண்டிருக்கிறது. பொலிவதும் கலைவதும்தானே வாழ்க்கை இல்லையா?
எஸ்