கோவை சொல்முகம் வெண்முரசு கூடுகை 20

நண்பர்களுக்கு வணக்கம்.
கோவை சொல்முகம் வாசகர் குழுமத்தின் 20 வது வெண்முரசு கூடுகை வரும் ஞாயிறு அன்று கோவையில் நிகழவுள்ளது.
இதில் வெண்முரசு நூல் வரிசையின் ஏழாவது படைப்பான “இந்திரநீலம்” நாவலின் பின்வரும் பகுதிகளை முன்வைத்து கலந்துரையாட உள்ளோம்.
பகுதிகள்:
4. எழுமுகம்
5. கதிர்விளையாடல்
6. மணிமருள் மலர்
இதைத் தொடர்ந்து இரண்டாவது அமர்வில், மாதாந்திர நாவல் வாசிப்பு வரிசையில் லியோ டால்ஸ்டாய் அவர்களின் ‘அன்னா கரீனினா’ நாவல் மீது கலந்துரையாடல் நிகழும்.
ஆர்வமுள்ள இலக்கிய வாசகர்கள் அனைவரையும் இதில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
நாள் : 28-08-22, ஞாயிற்றுக்கிழமை.
நேரம் : காலை 10:00
இடம் : விஷ்ணுபுரம் பதிப்பகம், வடவள்ளி, கோவை.
தொடர்பிற்கு :
பூபதி துரைசாமி – 98652 57233
நரேன் – 73390 55954
முந்தைய கட்டுரைதமிழ் வாசிப்பு, ஸ்ரீதர் சுப்ரமணியன்
அடுத்த கட்டுரைசிறுகதைப் பயிலரங்கு, சத் தர்சன்