உ.வே.சாமிநாதையருக்கு ஆசிரியராக அமைந்தவர் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. ஓர் ஆசிரியராக அவர் தமிழின் மறுமலர்ச்சிக்கு பெரும் பங்காற்றியிருக்கிறார். நவீனத் தமிழிலக்கியத்தின் இஸ்லாமிய இலக்கிய மரபுக்கு தொடக்கப் புள்ளியாக அமைந்த குலாம் காதிறு நாவலரும் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணவரே
